twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடிகை குஷ்புவின் செல்போன்கள் திருட்டு!

    By Shankar
    |

    Kushboo
    நடிகை குஷ்புவின் செல்போன்களை யாரோ அபேஸ் செய்து விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார் குஷ்பு.

    ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யூவில் நேற்று மாலை பொருட்கள் வாங்கச் சென்றார் குஷ்பு. அங்குள்ள ஒரு கடை மேஜையில் தனது 2 செல்போனை வைத்து விட்டு பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது மேஜையில் வைத்திருந்த 2 செல்போனையும் காணவில்லையாம். திருட்டுப் போன செல்போன்கள் விலை உயர்ந்த பிளாக்பெர்ரி, ஐ போன் வகையை சேர்ந்தவை.

    இது குறித்து குஷ்பு மேலாளர் அன்பு அண்ணா சாலை போலீசில் புகார் செய்துள்ளார்.

    குஷ்பு அந்தக் கடைக்கு வந்த போது சில வடமாநில இளைஞர்கள் அங்கு நின்று கொண்டிருந்தார்களாம். செல்போன் மாயமான நேரத்தில் அவர்களும் அங்கிருந்து காணாமல் போய்விட்டார்களாம். எனவே இவர்கள்தான் செல்போன்களை அபேஸ் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    English summary
    Actress Kushboo's cellphones were looted by some unknown persons in Express Avenue on Friday evening. Later the actor filed complaint with City police.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X