Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பணத்துக்காக நடிகைகள் விபச்சாரத்துக்குப் போவதை ஏற்க முடியாது! - குஷ்பு
சென்னை: ஸ்வேதா பாசு போன்ற நடிகைகள் பணத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழில் ராரா, சந்தமாமா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்வேதா பாசு.
தெலுங்கிலும் நடித்துள்ள இவர் ஹைதராபாத்தில் விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் திடீரென்று கைது செய்தனர். நட்சத்திர ஓட்டலில் தொழில் அதிபருடன் அவர் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் வந்ததையடுத்து போலீசார் அங்கு முற்றுகையிட்டு நேரில் கைது செய்தார்கள்.
பிரபல நடிகையான ஸ்வேதா விபசாரத்தில் கைதானது தமிழ், தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது பெண்கள் மறுவாழ்வு இல்லத்தில் ஸ்வேதா தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
சினிமா வாய்ப்பு இல்லாமல் பண நெருக்கடி ஏற்பட்டதால் இப்படி விபச்சாரத்தில் இறங்கியதாக ஸ்வேதா பாசு கூறியதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாலிவுட்டில் ஒரு பெரிய சினிமா வாய்ப்பே அவருக்கு வந்துள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவும் ஸ்வேதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, அவருக்கு உதவவும் முன்வந்துள்ளார்.
இந்தி இயக்குநர் விக்ரம் பட்டும் ஸ்வேதா பாசுக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்துள்ளார். மேலும் பல இயக்குனர்கள் ஸ்வேதாவுக்கு பட வாய்ப்பு தருவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த விஷயத்தில் குஷ்புவின் பார்வை வேறாக உள்ளது.
ஆனால் குஷ்பு மட்டும் பண கஷ்டத்தால் விபசாரத்தில் ஈடுபட்டேன் என்ற ஸ்வேதாவின் நிலை மிகத் தவறான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "நிறைய நடிகைகளுக்கு இவரைப் போல் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. சினிமாவில் வாய்ப்பு இல்லாவிட்டால் டி.வி.க்கு போகலாம். அல்லது குணசித்திர வேடங்களில் நடிக்கலாம். இப்படி எத்தனையோ மாற்று வாய்ப்புகள் இருக்கின்றன.
அதை விட்டுவிட்டு உங்களையே நீங்கள் விற்கும் நிலைக்கு போவதை ஏற்க முடியாது. இது போன்ற செயல்களை பெற்றோர் அல்லது உடனிருப்போர் எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதுதான் நெருடலாக இருக்கிறது. அவரது செயலுக்கு பெற்றோரைத்தான் நான் குற்றம் சொல்வேன்," என்றார்.