என்ன பண்றார் லைலா? லைலா எப்போதோ நடித்த உள்ளம் கேட்குமே படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் எங்கே போனார்இந்த லைலா, ஏன் நடிப்பதில்லை என்ற கேள்வி எழாமல் இருக்காது.நாம் தான் லைலாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் லைலா தமிழ் சினிமாவை சுத்தமாக மறந்து விட்டார். மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். இந்திப் படங்களில் பிண்ணி எடுத்துக் கொண்டிருக்கிறார்.கள்ளழகர் மூலம் அறிகமாகிய இந்தக் கன்னக் குழியழகிக்கு பார்த்தேன் ரசித்தேன் மூலம் பிரேக் கிடைத்து ரசிகர்களின் மனதில் விழுந்தார்.தொடர்ந்து ஒரு ரவுண்டு வர ஆரம்பித்த லைலா, பிதாமகனில் நடிப்பில் புகுந்து விளையாடினார். அந்தப் படத்தில் அவரும் சூர்யாவும் பண்ணிய ரகளையில் ரசிகர்கள் குஷியோ குஷியில் மூழ்கினார்கள்.நடிப்பில் மட்டுமல்லாமல் கிசுகிசுக்களிலும் படு வேகமாக கலக்கினார் லைலா. பாலாவுடன் சேர்த்து பேசப்பட்டார். ரெண்டு பேரும் கல்யாணம்பண்ணிக் கொள்ளப் போவதாகவும் பேச்சு வந்தது. நந்தா அதைத் தொடர்ந்து பிதாமகன் என இரண்டு படங்களில் பாலா இயக்கத்தில் லைலா நடித்ததால் இந்த வதந்தி கிளம்பியதாக பாலா தரப்பில்கூறப்பட்டது.திடீரென பாலா கல்யாணம் பண்ணிக் கொண்டு போக லைலா தமிழ் சினிமாவை விட்டுப் போனார். அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று நாமாக நினைத்துக் கொள்வோம். நிற்க! லைலா நடித்த உள்ளம் கேட்குமே இப்போது வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது லைலா உச்சத்தில்இருந்த போது, தயாரிக்கப்பட்ட படம் உள்ளம் கேட்குமே. சில பல பிரச்சினைகளால் இப்போது தான் ரிலீஸ் ஆகியுள்ளது.உள்ளம் கேட்குமே படத்திற்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ் மும்பையில் உள்ள லைலாவின் காதுகளுக்கும் போனதாம். சந்தோஷப்பட்டாராம்.இருப்பினும் இப்போதைக்கு மீண்டும் தமிழில் நடிக்கும் எண்ணம் இல்லையாம் லைலாவுக்கு. காரணம், கையில் சில இந்திப் படங்கள் இருக்கிறதாம். புதுசா ஒரு பங்களா வாங்கியுள்ளாராம். எனவே சாலிடாக மும்பையில் செட்டிலாகி விட்டதாககூறுகிறார்கள்.அழகிய லைலா, தமிழை இப்படி அவாய்ட் செய்வது அழகா?

By Staff

லைலா எப்போதோ நடித்த உள்ளம் கேட்குமே படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் தமிழ் ரசிகர்கள் மனதில் எங்கே போனார்இந்த லைலா, ஏன் நடிப்பதில்லை என்ற கேள்வி எழாமல் இருக்காது.

நாம் தான் லைலாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் லைலா தமிழ் சினிமாவை சுத்தமாக மறந்து விட்டார். மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். இந்திப் படங்களில் பிண்ணி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

கள்ளழகர் மூலம் அறிகமாகிய இந்தக் கன்னக் குழியழகிக்கு பார்த்தேன் ரசித்தேன் மூலம் பிரேக் கிடைத்து ரசிகர்களின் மனதில் விழுந்தார்.தொடர்ந்து ஒரு ரவுண்டு வர ஆரம்பித்த லைலா, பிதாமகனில் நடிப்பில் புகுந்து விளையாடினார்.

அந்தப் படத்தில் அவரும் சூர்யாவும் பண்ணிய ரகளையில் ரசிகர்கள் குஷியோ குஷியில் மூழ்கினார்கள்.

நடிப்பில் மட்டுமல்லாமல் கிசுகிசுக்களிலும் படு வேகமாக கலக்கினார் லைலா. பாலாவுடன் சேர்த்து பேசப்பட்டார். ரெண்டு பேரும் கல்யாணம்பண்ணிக் கொள்ளப் போவதாகவும் பேச்சு வந்தது.


நந்தா அதைத் தொடர்ந்து பிதாமகன் என இரண்டு படங்களில் பாலா இயக்கத்தில் லைலா நடித்ததால் இந்த வதந்தி கிளம்பியதாக பாலா தரப்பில்கூறப்பட்டது.

திடீரென பாலா கல்யாணம் பண்ணிக் கொண்டு போக லைலா தமிழ் சினிமாவை விட்டுப் போனார். அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று நாமாக நினைத்துக் கொள்வோம்.

நிற்க! லைலா நடித்த உள்ளம் கேட்குமே இப்போது வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது லைலா உச்சத்தில்இருந்த போது, தயாரிக்கப்பட்ட படம் உள்ளம் கேட்குமே. சில பல பிரச்சினைகளால் இப்போது தான் ரிலீஸ் ஆகியுள்ளது.

உள்ளம் கேட்குமே படத்திற்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ் மும்பையில் உள்ள லைலாவின் காதுகளுக்கும் போனதாம். சந்தோஷப்பட்டாராம்.இருப்பினும் இப்போதைக்கு மீண்டும் தமிழில் நடிக்கும் எண்ணம் இல்லையாம் லைலாவுக்கு.

காரணம், கையில் சில இந்திப் படங்கள் இருக்கிறதாம். புதுசா ஒரு பங்களா வாங்கியுள்ளாராம். எனவே சாலிடாக மும்பையில் செட்டிலாகி விட்டதாககூறுகிறார்கள்.

அழகிய லைலா, தமிழை இப்படி அவாய்ட் செய்வது அழகா?

Read more about: laila settled in mumbai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X