லக்ஷ்மி மேனன் எஸ்.எஸ்.எல்.சி. ஃபெயில்: ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தீயா பரவும் செய்தி

சுந்தர பாண்டியன் படம் மூலம் கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் லகஷ்மி மேனன். அவர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் லக்ஷ்மி 85 சதவீத மதிப்பெண்கள்
வாங்கி தேர்ச்சி பெற்றார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அவர் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார் என்ற செய்தி பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக அவர் அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்ததாக செய்தி பரவுகிறது.
இது குறித்து லக்ஷ்மி மேனனின் தாய் கூறுகையில்,
என் மகள் தேர்வில் தோல்வி அடையவில்லை. பர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications