கோலிவுட்டில் பாஸ்.. ஆனாலும் பரீட்சைக்குப் படிக்கும் லட்சுமி மேனன்!

காரணம்....
பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு மும்முரமாகப் படித்துக் கொண்டிருப்பதுதான். சென்னையில் இருந்தால் படிக்க முடியாது என்பதாலோ என்னமோ... சொந்த ஊரான கொச்சிக்கே போய்விட்டாராம்.
பிப்ரவரி இறுதியில் பரீட்சை. இந்தத் தேர்வுக்குப் பிறகுதான் படங்களில் நடிப்பே என்று கூறிவிட்டதால், சற்குணம் உள்ள இயக்குநர்கள் லட்சுமி மேனனின் பரீட்சை முடிய காத்திருக்கிறார்களாம்.
'என்னதான் நடித்து லட்ச லட்சமாக சம்பாதித்தாலும், படிப்பு இல்லாவிட்டால் வாழ்க்கை முழுமையடையாது. அதனால் படிப்புதான் முதலில்... சினிமா அப்புறம்,' என்று தெளிவாகக் கூறிவிட்டாராம் லட்சுமி.
பரவால்லயே... பெயரில் லட்சுமியாக இருந்தாலும் குணத்தில் சரஸ்வதியாக இருக்காரே!


Click it and Unblock the Notifications











