யாரு.. டோனி, ஸ்ரீசாந்தா... அவங்க கூட பேசியே ரொம்ப நாளாச்சே! - இது லட்சுமிராய் ரியாக்ஷன்

By Shankar

Lakshmi Rai denies her link in IPL cricketers
சென்னை: சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் அல்லது மற்ற வீரர்களுடன் என்னை இணைத்துப் பேசுவது தவறு. எனக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை. டோனி, ஸ்ரீசாந்த் போன்றவர்களுடன் பேசியே ரொம்ப நாளாகிவிட்டது என திடீர் அறிக்கை விடுத்துள்ளார் லட்சுமி ராய்.

சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்புள்ள நடிகைகள் என்ற பட்டியலில் நடிகை லட்சுமிராய்பெயர் பலமாக அடிபடுகிறது. இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தூதுவராக இருந்துள்ளார்.

டோனிக்கு மிக நெருக்கமானவர் என்றும் கிசுகிசுக்கப்பட்டார். இதையெல்லாம் பார்த்து மகா கோபத்துக்குள்ளாகியிருக்கும் லட்சுமி ராய் அளித்துள்ள மறுப்பு செய்தியில், "கிரிக்கெட் வீரர்கள் டோனி, ஸ்ரீசாந்துடன் என்னை இணைத்துப் பேச வேண்டாம்.

ஸ்ரீசாந்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. டோனியுடன் பேசியே பல வருடங்கள் ஆகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் ஆரம்பித்த போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் தூதராக இருந்தேன். நான் மட்டுமா இருந்தேன்... நயன்தாராவும்தான் அப்பொறுப்பில் இருந்தார். அதன் பிறகு ஐ.பி.எல். அணியில் நான் இல்லை.

யாருடனும் எந்தத் தொடர்பிலும் இல்லை. டோனியுடன் என்னை இணைத்து பேசுவது சரியல்ல.

கேரள கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக இருந்தது உண்மைதான். டைரக்டர் பிரியதர்ஷன் அழைத்ததால் அங்கு சென்றேன்.

கிரிக்கெட் வீரர்களுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுவதால் எனது இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது. நான் தொழில் அதிபர் ஒருவரை காதலிக்கிறேன். சினிமாவுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. பொது நிகழ்ச்சியில் சந்தித்தோம். நட்பாக பழகினோம். பின்னர் காதலிக்க ஆரம்பித்துள்ளோம். அவர் யார் என்பதை சொல்ல மாட்டேன். எங்களுக்கு திருமணம் நடக்கப் போகிறது. எனவே தேவையற்ற வதந்திகளை வெளியிடவேண்டாம்," என்றார் லட்சுமி ராய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X