twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை விஜயசாந்தி மீது நில மோசடி வழக்கு

    By Shankar
    |

    Vijayashanthi
    சென்னை: பிரபல நடிகையும் தெலுங்கானா ராஷ்ட்ரி சமிதியின் முக்கிய தலைவருமான விஜயசாந்தி மீது சென்னை எழும்பூரை சேர்ந்த இந்தர்சந்த் ஜெயின் நிலமோசடி புகார் கொடுத்துள்ளார்.

    ஓட்டல் அதிபரான இவர், எழும்பூர் முதன்மை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், ஒரு மனு கொடுத்தார்.

    அதில், "சென்னை தியாகராயநகர் டாக்டர் நாயர் சாலையில், உள்ள 2 கிரவுண்டு நிலம் ஒன்றுக்கு நடிகை விஜயசாந்தி பவர் ஏஜெண்டாக உள்ளார். இந்த நிலத்தை எனக்கு விற்பனை செய்வதற்கு ஒப்புக் கொண்ட அவர், அதற்காக, ரூ.5 கோடி பணமும் பெற்றுக் கொண்டார். நிலம் விற்பனை தொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டது.

    ஆனால் குறிப்பிட்ட நிலத்தை எனக்கு தராமல் வேறு ஒருவருக்கு விஜய சாந்தி விற்பனை செய்து மோசடி செய்து விட்டார். நான் கொடுத்த ரூ.5 கோடியையும் என்னிடம் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு விஜயசாந்தி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.

    English summary
    Chennai based hotel owner lodged a land cheating complaint on actress - politicin Vijayashanthi today at Egmore court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X