Don't Miss!
- News முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் திடீர் விசிட்.. கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை.. பக்கத்தில் அது யாரு?
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Sports குஜராத்துக்கு எதிராக அபாரமாக வென்றது எப்படி? 89 ரன்களில் சுருட்டியதன் ரகசியத்தை கூறிய ரிஷப் பண்ட்
- Automobiles குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
லாக்டவுனுக்கு பின் படப்பிடிப்பு.. நெருக்கமானக் காட்சிகளில் எப்படி நடிப்பது? பிரபல நடிகை முடிவு!
சென்னை: லாக்டவுனுக்கு பிறகு தொடங்கும் சினிமா படப்பிடிப்புகள் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி.
தமிழில், சாக்ரடீஸ் இயக்கத்தில் சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.
தொடர்ந்து சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்தில் நடித்திருந்தார்.
அட பாவிகளா.. அந்த இடத்துல இப்படியா க்ளோஸப் வைப்பீங்க.. "வைரஸ்" வேகத்தில் பரவும் நடிகையின் வீடியோ!
முன்னணி நடிகை
அடுத்து அதர்வா நடிக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்கிறார். படத்தை ரவீந்த்ரா மாதவன் இயக்குகிறார். இந்தப் படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். லாவண்யா திரிபாதி, ஐஏஎஸ் அதிகாரியாகும் முயற்சியில் இருப்பவராக நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர், ராஜமவுலி தயாரித்த அண்டால ராக்ஷசி என்ற படம் மூலம் அங்கு அறிமுகமானவர்.
நடவடிக்கை
கொரோனா வைரஸ் காரணமாக, இப்போது லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சினிமா படப்பிடிப்பு
இருந்தும் இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சினிமா, டிவி தொட்ர் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்க இப்போது அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் முதல், சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
முக்கியத்துவம்
இந்நிலையில், லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கினால் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை லாவண்யா. அவர் கூறும்போது, படப்பிடிப்புகளில், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னையும் என் உதவியாளர்களையும் பாதுகாப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
நெருக்கமான காட்சி
லாக்டவுனுக்கு பிறகு படப்பிடிப்புக்குச் சென்றால் அது உண்மையிலேயே வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஆனால், அரசு சொல்கிற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். நெருக்கமான காட்சிகள் இருந்தால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு அதை தவிர்த்துவிட முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.