Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
லாக்டவுனுக்கு பின் படப்பிடிப்பு.. நெருக்கமானக் காட்சிகளில் எப்படி நடிப்பது? பிரபல நடிகை முடிவு!
சென்னை: லாக்டவுனுக்கு பிறகு தொடங்கும் சினிமா படப்பிடிப்புகள் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி.
தமிழில், சாக்ரடீஸ் இயக்கத்தில் சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.
தொடர்ந்து சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்தில் நடித்திருந்தார்.
அட பாவிகளா.. அந்த இடத்துல இப்படியா க்ளோஸப் வைப்பீங்க.. "வைரஸ்" வேகத்தில் பரவும் நடிகையின் வீடியோ!
முன்னணி நடிகை
அடுத்து அதர்வா நடிக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்கிறார். படத்தை ரவீந்த்ரா மாதவன் இயக்குகிறார். இந்தப் படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். லாவண்யா திரிபாதி, ஐஏஎஸ் அதிகாரியாகும் முயற்சியில் இருப்பவராக நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர், ராஜமவுலி தயாரித்த அண்டால ராக்ஷசி என்ற படம் மூலம் அங்கு அறிமுகமானவர்.
நடவடிக்கை
கொரோனா வைரஸ் காரணமாக, இப்போது லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சினிமா படப்பிடிப்பு
இருந்தும் இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சினிமா, டிவி தொட்ர் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்க இப்போது அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் முதல், சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
முக்கியத்துவம்
இந்நிலையில், லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கினால் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை லாவண்யா. அவர் கூறும்போது, படப்பிடிப்புகளில், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னையும் என் உதவியாளர்களையும் பாதுகாப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
நெருக்கமான காட்சி
லாக்டவுனுக்கு பிறகு படப்பிடிப்புக்குச் சென்றால் அது உண்மையிலேயே வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஆனால், அரசு சொல்கிற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். நெருக்கமான காட்சிகள் இருந்தால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு அதை தவிர்த்துவிட முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.