நடிகை ஹேமமாலினி வீட்டுக்குள் சிறுத்தை புகுந்தது

தற்போது வனத்துறை ஊழியர்கள் குழு ஹேமமாலினியின் பங்களாவுக்கு விரைந்துள்ளது. சிறுத்தை புகுந்த வீட்டில் தற்போது ஹேமமாலினி இல்லை.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில வனத்துறை அமைச்சர் பதங்கராவ் கதம் கூறுகையில், இதுகுறித்து வனத்துறையினரிடம் விவரம் கோரியுள்ளேன். எப்படி அங்கு சிறுத்தை வந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
ஹேமமாலினியின் வீட்டுக்குள் சிறுத்தை புகுந்த செய்தி மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications











