Don't Miss!
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிரித்துப் பேசினால் சிம்புவுடன் காதலா: நயன்தாரா நர நர
சென்னை: பாண்டிராஜ் படப்பிடிப்பில் சிம்புவுடன் சிரித்துப் பேசினால் உடனே எங்களுக்குள் மீண்டும் காதல் ஏற்பட்டுவிட்டதாக தகவல் பரப்பிவிடுவதா என்று நயன்தாரா கோபத்தில் உள்ளாராம்.
முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்று சேர்ந்து பாண்டிராஜ் படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பில் நயனும், சிம்புவும் சிரித்துப் பேசிக் கொண்டார்களாம். அவர்கள் பழகும் விதத்தை பார்த்து படக்குழுவினர் அவர்களுக்குள் மீண்டும் காதல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி வருகிறார்களாம்.
இந்நிலையில் சிம்புவும், நயனும் படப்பிடிப்பில் சிரித்துப் பேசும் போட்டோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. சிம்புவுடன் சிரித்துப் பேசினால் உடனே காதலா, இப்படித் தான் போட்டோவை இணையதளத்தில் போட்டு தகவல் பரப்புவதா என்று நயன் காட்டத்தில் உள்ளாராம்.
நயன்தாரா தற்போது ஜெயம் ரவியுடன் சேர்ந்து பெங்களூரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.