தோழிகளான ஷில்பா ஷெட்டி, மான்யதா தத் கணவர்களால் பிரிந்துவிட்டார்களா?

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வரை பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தத்தும் நெருங்கிய தோழிகள். இது பாலிவுட்டுக்கே தெரியும். அவர்களின் நெருக்கத்தால் ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவும், சஞ்சய் தத்தும் நண்பர்கள் ஆனார்கள். மேலும் ராஜ் குந்த்ராவின் வியாபாரத்திலும் சஞ்சய் பார்ட்னராக ஆனார்.
இந்நிலையில் குந்த்ராவுக்கும், சஞ்சய் தத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்பாவும், மான்யதாவும் முகம் கொடுத்து பேசக் கூட செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
கணவர்களுக்காக அவர்கள் நட்பை ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











