மதுபாலாவை ஓங்கி அறைந்த நானே படேகர்.. உடனே பதிலடி கொடுத்த மதுபாலா.. அடேங்கப்பா இதெல்லாம் நடந்திருக்கா?
சென்னை: 'ரோஜா' படத்தின் மூலம் இந்திய சினிமா உலகில் புகழ்பெற்றவர் நடிகை மதுபாலா. இப்போது 57 வயதாகும் அவர், தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 1997-ம் ஆண்டு வெளியான 'யஷ்வந்த்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியான அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் நடித்தபோது நடிகர் நானா படேகர் தன்னை நிஜமாகவே அறைந்ததாக அவர் கூறியுள்ள விஷயம் தற்போது சினிமா உலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
அந்த குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும்போது, நடிகர் நானா படேகர் கிளிசரின் பயன்படுத்த மறுத்துவிட்டார். கதாபாத்திரத்தின் உணர்வுகளை எந்தவித போலித்தனமும் இல்லாமல் அப்படியே நிஜமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. இதனால் நிஜமான கண்ணீர் வர வேண்டும் என்று அவர் விரும்பிய சூழலில், நடிகை மதுபாலாவால் அந்த காட்சியில் உடனடியாக கண்ணீர் வரவழைக்க முடியவில்லை. இந்த சிக்கலான சூழலில்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது.
கோபத்தில் திருப்பியடித்த மதுபாலா: அப்போது உணர்ச்சிவசப்பட்ட நானா படேகர், எதிர்பாராதவிதமாக மதுபாலாவை ஓங்கி அறைந்தார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். தனக்கு நேர்ந்த இந்த செயலால் கோபம் தலைக்கேறிய மதுபாலாவும், சற்றும் யோசிக்காமல் நானா படேகரை உடனே திருப்பியடித்தார்.

திட்டமிடப்படவில்லை: "இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விஷமும் அல்ல. அது எனது இயல்பான தற்காப்பு மறுவினை தான். எதிர்பாராமல் நடந்த அந்த அடியால் ஏற்பட்ட கோபத்தில் நான் அப்படி செய்துவிட்டேன்" என்று மதுபாலா தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மெத்தட் ஆக்டிங் பாடம்: இப்படத்தின் இயக்குனர் அனில் மோட்டூவால் இந்த ஒரு காட்சியைப் படமாக்குவதற்காக மட்டுமே ஒரு முழு நாளை ஒதுக்கியிருந்தார். ஆனால், இருவருமே நிஜமாகவே அடித்துக்கொண்டதால், அந்த காட்சியில் இருவரின் உணர்வுகளும் மிக எதார்த்தமாக வெளிப்பட்டன. இந்த தீவிரமான நடிப்பின் காரணமாக, மீண்டும் அதே காட்சியை மறுபடி படமாக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனதுடன், காட்சியும் மிகச் சிறப்பாக அமைந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
அனுபவம்: இந்த அனுபவம் தனக்கு ஒரு சிறந்த 'மெத்தட் ஆக்டிங்' பாடமாக அமைந்தது என்று மதுபாலா கூறியுள்ளார். அதுவரை கேமராவுக்கு முன்னால் மட்டும் நடித்துப் பழகிய தனக்கு, கதாபாத்திரமாகவே மாறி வாழ்வதை நானா படேகர் கற்றுக்கொடுத்ததாக அவர் தெரிவித்தார். வெறும் நடிப்பதை விட, அந்த கதாபாத்திரத்தின் உணர்வை முழுமையாக அனுபவிப்பதே முக்கியம் என்பதை இந்த சம்பவம் தனக்கு புரிய வைத்ததாக மதுபாலா உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications