twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுமிதாவின் ஆச்சரியம் குடைக்குள் மழை மதுமிதா படு சூப்பராக தேறி விட்டார், தற்கால கோலிவுட் தேவைகளையும் அவர் நல்லாவேபுரிந்து கொண்டுள்ளார்.நடிகர் கம் இயக்குநர் பார்த்திபன் செய்த சில நல்ல காரியங்களில் மதுமிதாவை அறிகப்படுத்தியதையும்சேர்த்துக் கொள்ளலாம். பார்த்துவுடனே ஸ்டன் ஆகிப் போய் விடும் அளவு அசரடிக்கும் அழகுடன் உள்ளமதுமிதாவுக்கு கோடம்பாக்கம் இன்னும் நல்ல குடையாக விரிக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.குடைக்குள் மழை மூலம் ஆஜரான மதுமிதா, இங்கிலீஷ்காரனில் நமீதாவின் தங்கச்சியாக வந்து போனார்.அப்படியும், இப்படியுமாக ஊசலாடிக் கொண்டுள்ள மதுமிதாவின் திரை வாழ்க்கை எப்போது பிரகாசமாகும் எனத்தெரியாவிட்டாலும், விளம்பர வாழ்க்கை படு ஜோராகவே போய்க் கொண்டுள்ளதாம். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து அசத்திக் கொண்டிருக்கும் மதுமிதா, கிடைக்கிறவாய்ப்புகளை எல்லாம் அள்ளிப் போட்டுக் கொள்ளும் ரகம் இல்லையாம். வர்ற வாய்ப்புகளில் தனக்கு என்னமுக்கியத்துவம் என்பதை தெரிந்து கொண்டு தான் ஏற்றுக் கொள்கிறார்.முன்பு பேச ரொம்ப யோசிப்பார் மதுமிதா. ஏதாவது தப்பாக பேசி விடுவோமோ என்ற பயம் தான் அது. ஆனால்இப்போது அம்மணி தேறி விட்டார். படு கூலாக பேசுகிறார், விவரமாக, விலாவரியாக பேசி அசத்துகிறார்.சினிமா இப்போது ரொம்ப மாறி விட்டது. அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு. இது யூத்களின் காலம்.அவர்களது ரசனைகளை பூர்த்தி செய்யும் படம் தான் ஜெயிக்கும். அதிலும், இப்போது முத்தக் காட்சிகள் படு சாதாரணம். முத்தக் காட்சிகளில் நடிக்க நான் தயங்கியதேகிடையாது. அதே சமயம், ஆபாசம் கொப்பளிக்கும் விதமான காட்சிகளில் நடிக்க மாட்டேன்.முத்தம் என்பது அன்பைப் பரிமாறிக் கொள்ளுகிற சமாச்சாரம். அம்மா, குழந்தைக்குக் கொடுக்கும் முத்தம் எப்படிசாதாரணமானதோ, அதுபோலத்தான் காதலனும், காதலியும் பரிமாறிக் கொள்ளும் முத்தம்.நிஜத்தில் எப்படி காதலன், காதலிக்கு முத்தம் கொடுப்பது சாதாரணமான விஷயமோ, அதுபோலத்தான்திரையிலும். எனவே சினிமாவில் முத்தக் காட்சி இல்லாமல் ஒரு படத்தை உருவாக்கினால் அது ஆச்சர்யம் தான்என்று பேசி அசத்துகிறார் மதுமிதா.தேவலாம் தான்!

    By Staff
    |

    குடைக்குள் மழை மதுமிதா படு சூப்பராக தேறி விட்டார், தற்கால கோலிவுட் தேவைகளையும் அவர் நல்லாவேபுரிந்து கொண்டுள்ளார்.

    நடிகர் கம் இயக்குநர் பார்த்திபன் செய்த சில நல்ல காரியங்களில் மதுமிதாவை அறிகப்படுத்தியதையும்சேர்த்துக் கொள்ளலாம். பார்த்துவுடனே ஸ்டன் ஆகிப் போய் விடும் அளவு அசரடிக்கும் அழகுடன் உள்ளமதுமிதாவுக்கு கோடம்பாக்கம் இன்னும் நல்ல குடையாக விரிக்கவில்லை என்பது தான் ஆச்சரியம்.

    குடைக்குள் மழை மூலம் ஆஜரான மதுமிதா, இங்கிலீஷ்காரனில் நமீதாவின் தங்கச்சியாக வந்து போனார்.அப்படியும், இப்படியுமாக ஊசலாடிக் கொண்டுள்ள மதுமிதாவின் திரை வாழ்க்கை எப்போது பிரகாசமாகும் எனத்தெரியாவிட்டாலும், விளம்பர வாழ்க்கை படு ஜோராகவே போய்க் கொண்டுள்ளதாம்.


    சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து அசத்திக் கொண்டிருக்கும் மதுமிதா, கிடைக்கிறவாய்ப்புகளை எல்லாம் அள்ளிப் போட்டுக் கொள்ளும் ரகம் இல்லையாம். வர்ற வாய்ப்புகளில் தனக்கு என்னமுக்கியத்துவம் என்பதை தெரிந்து கொண்டு தான் ஏற்றுக் கொள்கிறார்.

    முன்பு பேச ரொம்ப யோசிப்பார் மதுமிதா. ஏதாவது தப்பாக பேசி விடுவோமோ என்ற பயம் தான் அது. ஆனால்இப்போது அம்மணி தேறி விட்டார். படு கூலாக பேசுகிறார், விவரமாக, விலாவரியாக பேசி அசத்துகிறார்.

    சினிமா இப்போது ரொம்ப மாறி விட்டது. அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு. இது யூத்களின் காலம்.அவர்களது ரசனைகளை பூர்த்தி செய்யும் படம் தான் ஜெயிக்கும்.


    அதிலும், இப்போது முத்தக் காட்சிகள் படு சாதாரணம். முத்தக் காட்சிகளில் நடிக்க நான் தயங்கியதேகிடையாது. அதே சமயம், ஆபாசம் கொப்பளிக்கும் விதமான காட்சிகளில் நடிக்க மாட்டேன்.

    முத்தம் என்பது அன்பைப் பரிமாறிக் கொள்ளுகிற சமாச்சாரம். அம்மா, குழந்தைக்குக் கொடுக்கும் முத்தம் எப்படிசாதாரணமானதோ, அதுபோலத்தான் காதலனும், காதலியும் பரிமாறிக் கொள்ளும் முத்தம்.

    நிஜத்தில் எப்படி காதலன், காதலிக்கு முத்தம் கொடுப்பது சாதாரணமான விஷயமோ, அதுபோலத்தான்திரையிலும். எனவே சினிமாவில் முத்தக் காட்சி இல்லாமல் ஒரு படத்தை உருவாக்கினால் அது ஆச்சர்யம் தான்என்று பேசி அசத்துகிறார் மதுமிதா.

    தேவலாம் தான்!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X