எனக்கு வயசு பதினாறுதான்.. நடிச்சே ஆகவேண்டிய கட்டாமில்லை! - குக்கூ நாயகி மாளவிகா
சென்னை: பார்க்க பெரிய மனுஷி லுக்கிலிருக்கும் குக்கூ நாயகி மாளவிகா மேனன், தனக்கு பதினாறே வயதுதான் ஆகிறதென்றும், நடித்தே தீர வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த குக்கூ திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி, செய்தியாளர்களைச் சந்தித்தனர் படக்குழுவினர். அப்போது படத்தின் நாயகி மாளவிகா நாயர் கூறுகையில், "ஆக்ஷுவலா நான் மலையாளி (அதைச் சொல்லித்தான் தெரியணுமா...). தமிழ் சினிமா பெரிய இன்டஸ்ட்ரி. கமர்ஷியலா பெரிய படங்கள் பண்றாங்க. அதனால் நாம அங்கே போய் என்ன செய்யப் போகிறோம்.. என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, ராஜூ முருகன் என்னை அழைத்து கதை சொன்னார். பார்வையற்ற நாயகி பாத்திரம். என்னால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை முதலில்.

பின்னர் 7 நாட்கள் நடந்த பயிற்சி முகாம் போய், பார்வையற்றவர்களுடன் பழகி நடிக்க ஆரம்பித்தேன்.
எனக்கு நடிப்பு என்பது தொழில் இல்லை. பைலட் ஆக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஒரு பொழுதுபோக்காகத்தான் நடிக்கிறேன்.
ஜெர்மனியில் பயணிகள் விமான பயிற்சி கல்விக்கு விண்ணப்பித்துள்ளேன். கிடைத்தவுடன் சென்றுவிடுவேன். கிடைக்கும் இடைவெளியில் குக்கூ மாதிரி சவாலான காதாபத்திரம் கிடைத்தால் நடிப்பேன்," என்றார்.
ரொம்ப ஸேஃபா விளையாடுது பாப்பா!!


Click it and Unblock the Notifications











