twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாளவிகாவின் கவர்ச்சிக் கலக்கல் கவர்ச்சியாக நடிப்பதோ அல்லது உடலைக் காட்டி நடிப்பதோ, அது எனது இஷ்டம். இதில் என்னை யாரும் கட்டுப்படுத்தமுடியாது என்று கூறுகிறார் மாளவிகா.ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாரே, அதே மாளவிகா தான் இப்படிக் கூறுகிறார். சமீபத்தில் கூடசந்திரமுகியில் குட்டி ரோலில் வந்து போன மாளவிகா இப்போது இந்தியில் புயலைக் கிளப்பியுள்ளார். அதுவும் சும்மா புயல்இல்லை, உம்மா புயல்!"சி யூ அட் 9 என்ற இந்திப் படத்தில் வரைமுறையே இல்லாமல் வாய் விளையாட்டில் கலக்கியிருக்கிறார் மாளவிகா. அத்தோடுஇல்லாமல் நான் தம் அடிக்கிற ஸ்டைலைப் பாரு என்று புகையை விட்டும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அப்புறம், அந்தப்புரத்தில் மட்டுமே நடாத்தப்பட வேண்டிய படுக்கையறைக் காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்.மொத்தத்தில் பூனையாகக் காட்சியளித்த மாளு, இப்படத்தில் புலியென பாய்ந்து பயறுத்தியிருக்கிறார்.இப்படியாப்பட்ட மாளவிகாவுக்கு, சியு அட் 9 படத்தில் கவர்ச்சியாக நடித்ததற்காக பெண்கள் அமைப்புக்கள் பலத்த எதிர்ப்பும்,கண்டனமும் தெரிவித்துள்ளன. இப்படியும் நடிப்பீர்களா என்று கேட்டு வசவுகளும் வந்து விழுந்தவண்ணம் உள்ளன.ஆனால் மாளவிகாவோ டோண்ட் கேர் என்ற ரீதியில் வசவுகளை வாங்கி வாசலில் போட்டு விட்டு போய்க் கொண்டேஇருக்கிறார். அவரது கையில் இப்போது சில இந்திப் படங்கள். இதனால் கோலிவுட்டிலிருந்து இடம் பெயர்ந்து மும்பைக்குஜாகையை மாற்றியுள்ளார்.ஏங்க மாளவிகா, தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், ஷூட்டிங்கின் போது சில்மிஷம் செய்தார் என்பதற்காக ஊரைக் கூட்டிஉலையை வைத்தீர்களே, அப்படிப்பட்ட நீங்கோ, இப்படி நடிக்கலாமா என்று மாளவிகாவைக் கேட்டால், அட அது வேறபிரச்சினை. இது வேற. இப்படத்தின் காட்சிகளை என்னிடம் சொல்லி விட்டுத் தான் எடுத்தார் இயக்குனர். அந்தப் படத்தில் கவர்ச்சி அதிகம் என்பதைநான் மறுக்கவில்லை. அதேசமயம் அதில் ஆபாசம் இல்லை. நானே எனது குடும்பத்தாருடன் தான் அந்தப் படத்தை பார்த்தேன்.ரசித்துப் பார்த்தோம்.3 காட்சிகளில் மட்டும் தான் கிளாமர் கூடிப் போய் விட்டது. மற்றபடி கடுமையாக எதிர்க்கும் அளவுக்கு அப்படத்தில்கவர்ச்சியோ, அசிங்கமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று தலையைக் கோதிக் கொண்டே கூலாக கூறுகிறார்மாளவிகா.எல்லாம் சரி மாளு, படத்தில் வரும் சில படுக்கையறைக் காட்சிகளில் முதலில் நடிக்க மறுத்தீர்களாமே, மிரட்டிய பிறகு தான்நடித்தீர்களாமே? என்று கேட்டபோது, அப்படியெல்லாம் கிடையாது. முதல்ல ஒண்ணப் புஞ்சுக்கோங்க. இது எனது உடல். இதைஎப்படிக் காட்டி நடிக்க வேண்டும் எனது விருப்பம்.எனக்கு இஷ்டம் இருந்தால் உடம்பைக் காட்டி நடிப்பேன். அதை யாரும் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. நானேஇஷ்டப்பட்டுத் தான் அந்தக் காட்சிகளில் நடித்தேன். மிரட்டல் எல்லாம் நடக்கவில்லை. அது வெறும் டூப் என்று நெத்திடியாககூறினார் மாளவிகா.அப்ப இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டீங்க அப்படித் தானே? நோ, நோ, இப்பக் கூட சித்திரம் பேசுதடி படத்தில் ஒருபாட்டுக்கு (ஆகாக்ககாகா!)ஆடி விட்டுத் தான் வந்தேன். வாய்ப்பு வந்தால் நடிப்பேன், மாட்டேன் என்று சொல்ல மாட்டேன்என்று சிணுங்கியவாறு சொல்லி விட்டு அடுத்த சில்மிஷத்திற்காக ஓடிப் போனார் மாளவிகா.மாறிப் போய்ட்டீஹளே மாளவிகா!

    By Staff
    |


    கவர்ச்சியாக நடிப்பதோ அல்லது உடலைக் காட்டி நடிப்பதோ, அது எனது இஷ்டம். இதில் என்னை யாரும் கட்டுப்படுத்தமுடியாது என்று கூறுகிறார் மாளவிகா.

    ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாரே, அதே மாளவிகா தான் இப்படிக் கூறுகிறார். சமீபத்தில் கூடசந்திரமுகியில் குட்டி ரோலில் வந்து போன மாளவிகா இப்போது இந்தியில் புயலைக் கிளப்பியுள்ளார். அதுவும் சும்மா புயல்இல்லை, உம்மா புயல்!

    "சி யூ அட் 9 என்ற இந்திப் படத்தில் வரைமுறையே இல்லாமல் வாய் விளையாட்டில் கலக்கியிருக்கிறார் மாளவிகா. அத்தோடுஇல்லாமல் நான் தம் அடிக்கிற ஸ்டைலைப் பாரு என்று புகையை விட்டும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

    அப்புறம், அந்தப்புரத்தில் மட்டுமே நடாத்தப்பட வேண்டிய படுக்கையறைக் காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்.மொத்தத்தில் பூனையாகக் காட்சியளித்த மாளு, இப்படத்தில் புலியென பாய்ந்து பயறுத்தியிருக்கிறார்.

    இப்படியாப்பட்ட மாளவிகாவுக்கு, சியு அட் 9 படத்தில் கவர்ச்சியாக நடித்ததற்காக பெண்கள் அமைப்புக்கள் பலத்த எதிர்ப்பும்,கண்டனமும் தெரிவித்துள்ளன. இப்படியும் நடிப்பீர்களா என்று கேட்டு வசவுகளும் வந்து விழுந்தவண்ணம் உள்ளன.


    ஆனால் மாளவிகாவோ டோண்ட் கேர் என்ற ரீதியில் வசவுகளை வாங்கி வாசலில் போட்டு விட்டு போய்க் கொண்டேஇருக்கிறார். அவரது கையில் இப்போது சில இந்திப் படங்கள். இதனால் கோலிவுட்டிலிருந்து இடம் பெயர்ந்து மும்பைக்குஜாகையை மாற்றியுள்ளார்.

    ஏங்க மாளவிகா, தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், ஷூட்டிங்கின் போது சில்மிஷம் செய்தார் என்பதற்காக ஊரைக் கூட்டிஉலையை வைத்தீர்களே, அப்படிப்பட்ட நீங்கோ, இப்படி நடிக்கலாமா என்று மாளவிகாவைக் கேட்டால், அட அது வேறபிரச்சினை. இது வேற.

    இப்படத்தின் காட்சிகளை என்னிடம் சொல்லி விட்டுத் தான் எடுத்தார் இயக்குனர். அந்தப் படத்தில் கவர்ச்சி அதிகம் என்பதைநான் மறுக்கவில்லை. அதேசமயம் அதில் ஆபாசம் இல்லை. நானே எனது குடும்பத்தாருடன் தான் அந்தப் படத்தை பார்த்தேன்.ரசித்துப் பார்த்தோம்.

    3 காட்சிகளில் மட்டும் தான் கிளாமர் கூடிப் போய் விட்டது. மற்றபடி கடுமையாக எதிர்க்கும் அளவுக்கு அப்படத்தில்கவர்ச்சியோ, அசிங்கமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று தலையைக் கோதிக் கொண்டே கூலாக கூறுகிறார்மாளவிகா.

    எல்லாம் சரி மாளு, படத்தில் வரும் சில படுக்கையறைக் காட்சிகளில் முதலில் நடிக்க மறுத்தீர்களாமே, மிரட்டிய பிறகு தான்நடித்தீர்களாமே? என்று கேட்டபோது, அப்படியெல்லாம் கிடையாது. முதல்ல ஒண்ணப் புஞ்சுக்கோங்க. இது எனது உடல். இதைஎப்படிக் காட்டி நடிக்க வேண்டும் எனது விருப்பம்.

    எனக்கு இஷ்டம் இருந்தால் உடம்பைக் காட்டி நடிப்பேன். அதை யாரும் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. நானேஇஷ்டப்பட்டுத் தான் அந்தக் காட்சிகளில் நடித்தேன். மிரட்டல் எல்லாம் நடக்கவில்லை. அது வெறும் டூப் என்று நெத்திடியாககூறினார் மாளவிகா.

    அப்ப இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டீங்க அப்படித் தானே? நோ, நோ, இப்பக் கூட சித்திரம் பேசுதடி படத்தில் ஒருபாட்டுக்கு (ஆகாக்ககாகா!)ஆடி விட்டுத் தான் வந்தேன். வாய்ப்பு வந்தால் நடிப்பேன், மாட்டேன் என்று சொல்ல மாட்டேன்என்று சிணுங்கியவாறு சொல்லி விட்டு அடுத்த சில்மிஷத்திற்காக ஓடிப் போனார் மாளவிகா.

    மாறிப் போய்ட்டீஹளே மாளவிகா!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X