ஏறுமுகத்தில் மாளவிகா... பெங்களூர் தக்காளியான மாளவிகாவுக்கு மவுசு ஏறு முகத்தில் இருக்கிறது. இங்கல்ல, பாலிவுட்டில்.கருப்புத் தான் எனக்கு பிடிச்ச கலரு பாடி கோலிவுட்டில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்து விடலாம் என்று நினைத்திருந்தகன்னக்குழியழகி மாளவிகாவை தமிழ் சினிமா ஏமாற்றிவிட்டது.இடையிடேயே வந்து போகும் கெஸ்ட் அப்பியரன்ஸ் போல அப்பப்ப ஒரு படத்தில் நடித்து வருகிறார். சில படங்களில் ஒருபாட்டுக்கு குத்தாட்டம் போட்டார். கடைசியாக இவர் சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகியில் வந்து போனார். ஆனாலும் இவரதுமார்க்கெட்டில் எந்த பரபரப்பான முன்னேற்றத்தையும் காணோம்.இந் நிலையில் மும்பையில் தனக்கு வேண்டப்பட்டவர்களை "தேவையான விதத்தில் கவனித்து ஒரு படத்தைக் கைப்பற்றினார்மாளவிகா. என்ன, ஒரேயொரு கண்டிஷன் போட்டார்கள் மாளவிகாவுக்கு. அது வேறொன்றுமில்லை, கொஞ்சம் அதிகமாககவர்ச்சி காட்ட வேண்டும்.இதை, இதை இதைத் தான் நான் எதிர்பார்த்தேன் என்று துள்ளிக் குதித்த மாளவிகா, சீ யு அட் 9 என்ற அந்தப் படத்தில் டைரக்டர்எதிர்பார்த்ததை விட 100 சதவீதம் கவர்ச்சியில் புகுந்து விளையாடினார்.போதாக்குறைக்கு ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு லிப் டூ லிப் காட்சியிலும் தனது திறமையை காட்டினார்.பாலிவுட்காரர்களுக்கு இது போதாதா? படமும் பரபரப்பாக ஓடியது.இதற்குப் பிறகு என்ன நடக்கும், வழக்கம் போல பொட்டி நிறைய பணத்துடன் பாலிவுட் தயாரிப்பாளர்கள் மாளவிகாவின்வீட்டுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.எல்லோரும் மாளவிகாவிடம் வைக்கும் கோரிக்கை என்ன தெரியுமா? சீ யு அட்.. படத்தை விட தங்களது படத்தில் எல்லாமேதூக்கலாக இருக்க வேண்டும் என்று தான். மாளவிகாவும் ஓகே என்று என்று கூறிவிடுகிறார்.இந் நிலையில் சந்திரமுகிக்குப் பிறகு மாளவிகாவுக்கு மலையாள டைரக்டர் வினயன் இயக்கும் அற்புதத் தீவு மற்றும் கருணாநிதிகதை, வசனம் எழுதும் பாசக்கிளிகள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லாம் கெஸ்ட் ரோல் தான்.ராம நாராயணன் தயாரிக்கும் பாசக்கிளிகளை அமிர்தம் இயக்குகிறார். பிரபு, முரளி, வடிவேலு, நாசர், பசுபதி, வினீத், நவ்யாநாயர், ரோஜா, மனோரமாவுடன் மாளவிகாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.இந்தப் படத்தில் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகள் கருணாநிதிக்கு திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்தகருணாநிதி பிரபு மற்றும் முரளி ஆகியோரின் நடிப்பை மிகவும் பாராட்டினாராம்.இருவரும் ரொம்ப நன்றாக நடித்திருப்பதாக கூறிய அவர், மீதமுள்ள காட்சிகளுக்கு மிகவும் சுறுசுறுப்பாக வசனம் எழுதிவருகிறார்.பாசக்கிளிகள் படத்திற்காக மும்பையிலிருந்து சென்னை வந்த மாளவிகாவிடம் மும்பையில் என்ன விசேஷம் என்று கேட்கப்போன நிருபர்களை, பிறகு வாருங்கள் என்று கூறி விரட்டாத குறையாக திருப்பி அனுப்பியிருக்கிறார் மாளவிகா.பாலிவுட்டில் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி கேள்வி கேட்டுவிடுவர்களோ என்ற பயம் தான் இதற்கு காரணம்என்கிறார்கள் அவரது கோலிவுட் நண்பர்கள்.கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்து தானே ஆகணும்...

By Staff

பெங்களூர் தக்காளியான மாளவிகாவுக்கு மவுசு ஏறு முகத்தில் இருக்கிறது. இங்கல்ல, பாலிவுட்டில்.

கருப்புத் தான் எனக்கு பிடிச்ச கலரு பாடி கோலிவுட்டில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்து விடலாம் என்று நினைத்திருந்தகன்னக்குழியழகி மாளவிகாவை தமிழ் சினிமா ஏமாற்றிவிட்டது.

இடையிடேயே வந்து போகும் கெஸ்ட் அப்பியரன்ஸ் போல அப்பப்ப ஒரு படத்தில் நடித்து வருகிறார். சில படங்களில் ஒருபாட்டுக்கு குத்தாட்டம் போட்டார். கடைசியாக இவர் சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகியில் வந்து போனார். ஆனாலும் இவரதுமார்க்கெட்டில் எந்த பரபரப்பான முன்னேற்றத்தையும் காணோம்.


இந் நிலையில் மும்பையில் தனக்கு வேண்டப்பட்டவர்களை "தேவையான விதத்தில் கவனித்து ஒரு படத்தைக் கைப்பற்றினார்மாளவிகா. என்ன, ஒரேயொரு கண்டிஷன் போட்டார்கள் மாளவிகாவுக்கு. அது வேறொன்றுமில்லை, கொஞ்சம் அதிகமாககவர்ச்சி காட்ட வேண்டும்.

இதை, இதை இதைத் தான் நான் எதிர்பார்த்தேன் என்று துள்ளிக் குதித்த மாளவிகா, சீ யு அட் 9 என்ற அந்தப் படத்தில் டைரக்டர்எதிர்பார்த்ததை விட 100 சதவீதம் கவர்ச்சியில் புகுந்து விளையாடினார்.

போதாக்குறைக்கு ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு லிப் டூ லிப் காட்சியிலும் தனது திறமையை காட்டினார்.பாலிவுட்காரர்களுக்கு இது போதாதா? படமும் பரபரப்பாக ஓடியது.

இதற்குப் பிறகு என்ன நடக்கும், வழக்கம் போல பொட்டி நிறைய பணத்துடன் பாலிவுட் தயாரிப்பாளர்கள் மாளவிகாவின்வீட்டுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

எல்லோரும் மாளவிகாவிடம் வைக்கும் கோரிக்கை என்ன தெரியுமா? சீ யு அட்.. படத்தை விட தங்களது படத்தில் எல்லாமேதூக்கலாக இருக்க வேண்டும் என்று தான். மாளவிகாவும் ஓகே என்று என்று கூறிவிடுகிறார்.

இந் நிலையில் சந்திரமுகிக்குப் பிறகு மாளவிகாவுக்கு மலையாள டைரக்டர் வினயன் இயக்கும் அற்புதத் தீவு மற்றும் கருணாநிதிகதை, வசனம் எழுதும் பாசக்கிளிகள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லாம் கெஸ்ட் ரோல் தான்.


ராம நாராயணன் தயாரிக்கும் பாசக்கிளிகளை அமிர்தம் இயக்குகிறார். பிரபு, முரளி, வடிவேலு, நாசர், பசுபதி, வினீத், நவ்யாநாயர், ரோஜா, மனோரமாவுடன் மாளவிகாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகள் கருணாநிதிக்கு திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்தகருணாநிதி பிரபு மற்றும் முரளி ஆகியோரின் நடிப்பை மிகவும் பாராட்டினாராம்.

இருவரும் ரொம்ப நன்றாக நடித்திருப்பதாக கூறிய அவர், மீதமுள்ள காட்சிகளுக்கு மிகவும் சுறுசுறுப்பாக வசனம் எழுதிவருகிறார்.

பாசக்கிளிகள் படத்திற்காக மும்பையிலிருந்து சென்னை வந்த மாளவிகாவிடம் மும்பையில் என்ன விசேஷம் என்று கேட்கப்போன நிருபர்களை, பிறகு வாருங்கள் என்று கூறி விரட்டாத குறையாக திருப்பி அனுப்பியிருக்கிறார் மாளவிகா.

பாலிவுட்டில் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி கேள்வி கேட்டுவிடுவர்களோ என்ற பயம் தான் இதற்கு காரணம்என்கிறார்கள் அவரது கோலிவுட் நண்பர்கள்.

கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்து தானே ஆகணும்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X