Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கடும் குளிர் - மயங்கிய மல்லிகா கபூர்
ஷாம், மல்லிகா கபூர் நடிக்கும் படம் அந்தோணியார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை சுற்றுப்புறங்களில் நடந்து வந்தது. இந்த நிலையில் 2 பாடல்களைப் படமாக்குவதற்காக குலு மனாலிக்கு படக்குழுவினர் சென்றிருந்தனர்.
மொத்தம் 5 நாட்கள் குலு மனாலியில் முகாமிடத் தீர்மானித்திருந்தனர். இவர்கள் சென்ற நேரத்தில் கடும் குளிரும், பனிப்பொழிவும் இருந்தது. மேலும், மைனஸ் 5 டிகிரி அளவுக்கு கடும் குளிர் வாட்டியதால் படக்குழுவினர் நடுங்கியபடிதான் பாடல் காட்சியைப் படமாக்கினர்.
இந்த நிலையில் நாயகி மல்லிகா கபூர், குளிரைத் தாங்கும் ஆடைகளை அணியாமல் நடனமாடியுள்ளார். இதனால் குளிரைத் தாங்க முடியாமல் வெடவெடவென நடுங்கிய அவர் வாந்தி எடுத்தார். தொடர்ந்து அவர் மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த இயக்குநர் பாண்டி, படப்பிடிப்பை நிறுத்தினார். பின்னர் அவரும், நாயகன் ஷாம், தயாரிப்பாளர் விஜயக்குமார் ஆகியோர் மல்லிகாவை அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மல்லிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு ஒரு நாள் முழுவதும் ஓய்வில் இருந்தார் மல்லிகா கபூர். பிறகு உடல் நலம் சரியானதும் படப்பிடிப்பைத் தொடர்ந்தனராம்.