Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
தமிழில் மீண்டும் மல்லிகா ஷெராவத்... ஜீவனுடன் ஜோடி சேர, நடிகைக்கு சம்பளம் இவ்ளோ கோடியாம்!
சென்னை: பிரபல ஹாட் நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் மீண்டும் நடிக்கிறார். இதற்காக அவர் கோடிகளில் சம்பளம் பெற்றிருக்கிறார்.
காக்க காக்க, திருட்டுப் பயலே, நான் அவனில்லை, மச்சக்காரன், தோட்டா உட்பட சில படங்களில் நடித்தவர் ஜீவன்.
இவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு, பாம்பாட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது.
வி.சி.வடிவுடையான்
மிரட்டும் திகில் படமான இதை, தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். யுகபாரதி பாடல்களை எழுத, அம்ரீஷ் இசையமைக்கிறார். 6.2, ஓரம்போ, வாத்தியார் ஆகிய படங்களை தயாரித்த வி.பழனிவேல், தயாரிக்கிறார். பண்ணை இளங்கோவன் இணை தயாரிப்பு செய்கிறார்
மல்லிகா ஷெராவத்
கிராபிக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் ஜீவனுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேடி வந்தனர். முன்னணி நடிகைகள் சிலரிடம் பேசி வந்தனர். இப்போது பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். இவர் தமிழில் ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திலும் நடித்திருந்தார்.
சம்பளம்
இந்தியில் பிசியாக நடித்து வந்த இவர், சில ஆங்கில மற்றும் சீன படங்களிலும் நடித்துள்ளார். இப்போது அதிக வாய்ப்பில்லாமல் இருக்கும் அவருக்கு பாம்பாட்டம் படத்தில் நடிக்க சுமார் 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடக்க இருக்கிறது.
மாடர்ன் குயின்
இயக்குனர் வடிவுடையான் கூறும்போது, கடந்த வாரம் மும்பையில் நடிகை மல்லிகா ஷெராவத்தைச் சந்தித்து கதை சொன்னோம். கேட்டதுமே நடிக்க சம்மதித்தார். 'நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்காததால் நீண்ட நாட்களாக நடிக்கவில்லை. இந்த ஸ்கிரிப்ட் பிடித்திருப்பதால் நடிக்கிறேன்' என்றார். நவீன கால குயினாக அவர் நடிக்கிறார். படம் முழுவதும் வரும் கேரக்டர்' என்றார்.
இந்தி ஹீரோ
இந்தப் படத்துக்காக அவரது லுக்கை வித்தியாசமாக மாற்ற உள்ளனர். படத்தில் அவருக்கு ஆக்ஷன் காட்சிகளும் இருக்கின்றன. இந்த மாத இறுதியில் மல்லிகா ஷெராவத் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. சென்னையில் ஷூட்டிங் நடக்கிறது. இந்தப் படத்தில் இந்தி ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!