Just In
- 8 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 40 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
Don't Miss!
- News
சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு!
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லாக்டவுனில் ஜாலியா கேட் வாக்.. மல்லிகா ஷெராவத்தின் வைரல் வீடியோ!
மும்பை : ஊரடங்கிலும் வீட்டில் இருக்க முடியாமல் அருகில் இருக்கும் பூங்காவிற்கு வாக்கிங் சென்ற மல்லிகா ஷெராவத் .
தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றனர் அதுமட்டுமல்லாமல் பல மேலைநாடுகளில் உயிரிழப்புகளும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக உலகில் உள்ள பல நாடுகளில் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் லாக் டவுன் காரணமாக பல வணிகங்கள் மூடப்பட்டு இருக்கின்றன.

அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறு எதுவும் பல நாடுகளில் கிடைப்பது இல்லை. அதுவும் முக்கியமாக இந்தியாவில் மே 17ஆம் தேதி வரை லாக் டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் கூறியுள்ளது.
கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு மேல் மக்கள் இந்த ஊரடங்கில் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் அனைவருமே அவரவர் வீட்டுக்குள் இருந்து வருகின்றனர். இது ஒரு அளவுக்கு மேல் சலிப்பை உண்டாக்கி மக்கள் மிகவும் மோசமான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.
ஹைத்ராபாத் வா சில் பண்ணலாம்.. நடிகையை மிஸ் பண்ணும் பிரபல நடிகர்.. பகிரங்க அழைப்பு!
இந்தக் கொரோனா காரணமாக உலகமே ஸ்தம்பித்து இருக்கிறது யார் யார் உயிருடன் இருக்கப்போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. இந்த வைரஸை அழிக்கும் மருந்தினை கண்டுபிடிக்கும் வரை நம் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும்.

அதாவது வீட்டை விட்டு வெளியே வருவது கூட ஒரு கட்டத்தில் நம் வாழ்க்கையிலேயே பெரிய மகிழ்ச்சியான தருணமாக மாறக்கூடும் என்பதை சொல்லும் வகையில் மல்லிகா ஷெராவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஒரு பூங்காவில் நடந்து செல்லும் காணொளியை பதிவிட்டு இருக்கிறார்.

அதற்கு கீழே அவர் குறிப்பிட்டிருப்பது யாதெனில் ஒரு சாதாரண பூங்காவில் நடந்து செல்வது கூட இவ்வளவு பெரிய சந்தோசத்தை தரும் என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருந்தது இதனை உணர வைத்திருப்பது இந்த லாக் டவுன். இதன் காரணமாக நம் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன நல்ல விஷயங்களைக் கூட சந்தோஷத்துடன் அனுபவிக்கக்கூடிய மனநிலையை பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் கூறியிருப்பது மிகவும் உண்மைதானே. எவ்வளவு பணமும் புகழும் வசதி வாய்ப்புகளும் இருந்தாலும் இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருப்பதென்பது மிகுந்த வசதி வாய்ப்புகள் பொருத்தப்பட்ட இன்னொரு சிறைச்சாலை போலவே இருக்கும் என்பது போல மல்லிகாவின் ரசிகர்கள் பலர் ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் என்பது போல கூறியுள்ளனர்.

எனவே இந்த வைரஸ் இடம் மல்லிகா தான் கற்ற பாடத்தை தனது இன்ஸ்டாகிராம் காணொளியின் மூலம் தன்னுடைய ரசிகர்களுக்கும் பிற மக்களுக்கும் எடுத்துரைத்திருக்கிறார். அவர் பதிவிட்ட இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர் .