ரஜினியுடன் தனித் தீவில்... !- இது மல்லிகா ஷெராவத்தின் ஆசை
இப்போதெல்லாம் பாலிவுட்டில் புதிய ட்ரெண்ட்.. தங்கள் படங்கள் அல்லது ஆல்பங்களைப் பிரபலப்படுத்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரைப் பயன்படுத்துவது.
ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன், அமீர் கான், சல்மான் கான் என ஒருவரும் இதற்கு விலக்கல்ல. ரஜினி மீதான இவர்களின் காதல், அவர்களின் படங்கள் வெளியாகும்போது மட்டும்தான் என்பது அத்தனைப் பேருக்கும் புரிந்த ரகசியம்.
இப்போது இந்தப் பட்டியலில் மல்லிகா ஷெராவத்தும் சேர்ந்திருக்கிறார்.

இவரது ரியாலிட்டி ஷோவான தி பேச்சலரேட் இந்தியா - மேரே கயலோன் கி மல்லிகா இப்போது ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது.
இதற்கான விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த மல்லிகா ஷெராவத், "சூப்பர் ஸ்டார் ரஜினியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எந்த அளவுக்கென்றால்... நானும் அவரும் மட்டும் ஒரு தனித் தீவில் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் எனக்கு கொஞ்சம்கூட போரடிக்காது. ரஜினி என்னை அந்த அளவு மகிழ்விப்பார். அந்தத் தீவில் எப்போது எங்கே போக வேண்டுமென்றாலும் ரஜினி என்னை அழைத்துச் செல்வார்... அப்படி ஒரு அனுபவம் எனக்கு வேண்டும்," என்று கூறியுள்ளார்.
அமிதாப் பச்சனை தான் மிகவும் விரும்புவதாகவும் அவர் தன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











