மறுபடியும் நடிப்பில் தீவிரமான மல்லிகா-மலையாளத்தில் நடிக்கிறார்

ஆட்டோகிராப் படத்தின் மூலம் நடிகையானவர் மல்லிகா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் பச்செக்கன ஒரு இடத்தைப் பிடித்த மல்லிகாவுக்கு அதன் பிறகு அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது.
பேரரசுவின் திருப்பாச்சி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த மல்லிகா அதன் பிறகு முக்கியப் படங்களில் நடிக்கவில்லை. இடையில் டிவி சீரியலிலும் தலை காட்டியிருந்தார் மல்லிகா.
அதன் பின்னர் அவரைக் காணவில்லை. இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் மல்லிகா. தமிழ் கைவிட்டு விட்ட நிலையில், தாய் மொழியான மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் மல்லிகா.
இரு மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள மல்லிகா தமிழிலும் நடிக்க ரெடியாக இருக்கிறாராம். நல்ல வாய்ப்பு கிடைத்தால் தமிழிலும் நடிப்பாராம்.
முக்கியமான விஷயம், முன்பை விட படு பளபளப்பாக, புதுப் பொலிவோடு காணப்படுகிறார் மல்லிகா!.


Click it and Unblock the Notifications











