கணவரை விவாகரத்து செய்தார் நடிகை மம்தா மோகன்தாஸ்
எர்ணாகுளம்: நடிகை மம்தா மோகன்தாஸ் அவரது கணவர் பிரஜித் பத்மநாபனை விவாகரத்து செய்தார். எர்ணாகுளம் நீதிமன்றம் நேற்று அவருக்கு விவாகரத்தினை அறிவித்தது.
மம்தா மோகன்தாஸ் கேரளாவை சேர்ந்தவர். நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழிலில் விஷாலுடன் சிவப்பதிகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜய்யுடன் தடையற தாக்க படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் குசேலன் படத்தில் அவர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கில் ஏராளமான படங்களில் பின்னணி பாடியுள்ளார்.
மம்தா மோகன்தாசுக்கும் கேரள தொழில் அதிபர் பிரஜித் பத்மநாபனுக்கும் கடந்த 2011 டிசம்பரில் திருமணம் நடந்தது. 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து விவாகரத்து கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தற்போது அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.
மம்தா மோகன்தாஸ் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இனி முழு நேரமும் சினிமாதான் என்று அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











