twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மல்டி கலக்கல் மம்தா ஷகீலா இடத்தை நிரப்பப் போகிறார் என்று மம்தா மோகன்தாஸைப் பார்த்துமலையாளப் படவுலகமே புல்லரித்துப் போய்க் கிடக்கிறது.அந்த மம்மதா இப்போது தமிழ் ரசிகர்களின் நாடி, நரம்புகளை சூடாக்குவதற்காகசிவப்பதிகாரம் மூலம் தமிழில் காலெடுத்து வைக்கிறார்.லங்கா என்ற மலையாளப் படம் மூலம் நடிப்புச் சேவைக்கு வந்தவர் மம்தாமோகன்தாஸ். படு க்யூட் பேபியாக இருக்கும் மம்தா, லங்காவில் காட்டிய கிளாமரைப்பார்த்து மலையாள நாடே இன்னும் பிரமித்துப் போய்க் கிடக்கிறது.படம் சரியாக ஓடாவிட்டாலும் கூட மம்தாவின் கிளாமர் காட்சிகளை ரசிகர்கள்வேண்டி விரும்பிப் பார்த்தனர்.படத்தை விட மிக பரபரப்பாக ஓடிய மேட்டர், படத்தின் ஹீரோவான சுரேஷ்ேகோபிக்கும், மம்தாவுக்கும் இடையே பற்றிக் கொண்ட சூடான காதல்தான். இருவரும்பின்னிப் பிணைந்து போய் விட்டார்கள் என்று பரவிய செய்தியாள் சுரேஷ் கோபிகுடும்பமே இரண்டு பட்டுக் கிடக்கிறது.ஆனாலும் இதைப் பற்றிக் கவலைப்படாமல் கோபியுடன் இன்னும் டாக்கிக்கொண்டுதான் இருக்கிறாராம் மும்தா.இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம். சிவப்பதிகாரம் என்ற வித்தியாசமான கதையைபடமாக்குகிறார் கரு. பழனியப்பன். நல்ல தமிழ்ப் படங்களை கொடுப்பவர்களின்வரிசையில் பழனியப்பனுக்கும் ஒரு இடம் உள்ளது.பார்த்திபன் கனவு, என்ற அருமையான படத்தைக் கொடுத்தவர்தான் பழனி. அவரதுஇயக்கத்தில் சதுரங்கம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்போது சிவப்பதிகாரம் என்ற படத்தை இயக்கவுள்ளார் பழனியப்பன்.இப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது விஷால். வித்தியாசமான கதைக் களம்என்பதால் வித்தியாசமான ஹீரோவான விஷாலை போட்டுள்ளார் பழனியப்பன்.அவருக்கு ஜோடியாக வருகிறார் மம்தா. கிளாமர் காட்ட கொஞ்சம் தயங்காத மம்தாஇப்படத்தில் படு வித்தியாசமான ரோலில் வருகிறாராம். சொந்தக் குரலில்தான்பேசுவேன், சம்மதிக்க வேண்டும் என்று முன்பே பழனியப்பனிடம் கூறி விட்டாராம்.அவரும் ஓ.கே. சொல்லி விட்டாராம்.தமிழ் சினிமா ஹீரோயின்கள் யாரும் செய்யாத அளவுக்கு ஒரு கலக்கு கலக்கமுடிவெடுத்துள்ளாராம் மம்தா. வெறுமனே நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாட்டுப்பாடியும் அசத்தப் போகிறாராம்.இதனால் தனது குரலை பதிவு செய்து அந்தக் கேசட்டை இசையமைப்பாளர்கள்வித்யாசாகர், தேவா, பரத்வாஜ் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப் போகிறாராம்.அந்தக் காலத்தில் பானுமதி சாதித்ததைப் போல பாட்டு, ஆட்டம், நடிப்பு எனசகலகலா வித்தைக்காரியாக உருவெடுப்பதே தனது லட்சியம் என்கிறார் மம்க்குட்டிமம்தா.மம்தாவின் அலம்பலைப் பார்த்து ஏற்கனவே அங்கிருந்து இங்கு வந்து குப்பையைக்கொட்டிக் கொண்டிருக்கும் பல கேரளத்து வரவுகளுக்கு வயிற்றியில் புளியைக்கரைத்தது போல உள்ளதாம்.

    By Staff
    |

    ஷகீலா இடத்தை நிரப்பப் போகிறார் என்று மம்தா மோகன்தாஸைப் பார்த்துமலையாளப் படவுலகமே புல்லரித்துப் போய்க் கிடக்கிறது.

    அந்த மம்மதா இப்போது தமிழ் ரசிகர்களின் நாடி, நரம்புகளை சூடாக்குவதற்காகசிவப்பதிகாரம் மூலம் தமிழில் காலெடுத்து வைக்கிறார்.

    லங்கா என்ற மலையாளப் படம் மூலம் நடிப்புச் சேவைக்கு வந்தவர் மம்தாமோகன்தாஸ். படு க்யூட் பேபியாக இருக்கும் மம்தா, லங்காவில் காட்டிய கிளாமரைப்பார்த்து மலையாள நாடே இன்னும் பிரமித்துப் போய்க் கிடக்கிறது.

    படம் சரியாக ஓடாவிட்டாலும் கூட மம்தாவின் கிளாமர் காட்சிகளை ரசிகர்கள்வேண்டி விரும்பிப் பார்த்தனர்.

    படத்தை விட மிக பரபரப்பாக ஓடிய மேட்டர், படத்தின் ஹீரோவான சுரேஷ்ேகோபிக்கும், மம்தாவுக்கும் இடையே பற்றிக் கொண்ட சூடான காதல்தான். இருவரும்பின்னிப் பிணைந்து போய் விட்டார்கள் என்று பரவிய செய்தியாள் சுரேஷ் கோபிகுடும்பமே இரண்டு பட்டுக் கிடக்கிறது.


    ஆனாலும் இதைப் பற்றிக் கவலைப்படாமல் கோபியுடன் இன்னும் டாக்கிக்கொண்டுதான் இருக்கிறாராம் மும்தா.

    இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம். சிவப்பதிகாரம் என்ற வித்தியாசமான கதையைபடமாக்குகிறார் கரு. பழனியப்பன். நல்ல தமிழ்ப் படங்களை கொடுப்பவர்களின்வரிசையில் பழனியப்பனுக்கும் ஒரு இடம் உள்ளது.

    பார்த்திபன் கனவு, என்ற அருமையான படத்தைக் கொடுத்தவர்தான் பழனி. அவரதுஇயக்கத்தில் சதுரங்கம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

    இப்போது சிவப்பதிகாரம் என்ற படத்தை இயக்கவுள்ளார் பழனியப்பன்.

    இப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது விஷால். வித்தியாசமான கதைக் களம்என்பதால் வித்தியாசமான ஹீரோவான விஷாலை போட்டுள்ளார் பழனியப்பன்.

    அவருக்கு ஜோடியாக வருகிறார் மம்தா. கிளாமர் காட்ட கொஞ்சம் தயங்காத மம்தாஇப்படத்தில் படு வித்தியாசமான ரோலில் வருகிறாராம். சொந்தக் குரலில்தான்பேசுவேன், சம்மதிக்க வேண்டும் என்று முன்பே பழனியப்பனிடம் கூறி விட்டாராம்.அவரும் ஓ.கே. சொல்லி விட்டாராம்.

    தமிழ் சினிமா ஹீரோயின்கள் யாரும் செய்யாத அளவுக்கு ஒரு கலக்கு கலக்கமுடிவெடுத்துள்ளாராம் மம்தா. வெறுமனே நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாட்டுப்பாடியும் அசத்தப் போகிறாராம்.

    இதனால் தனது குரலை பதிவு செய்து அந்தக் கேசட்டை இசையமைப்பாளர்கள்வித்யாசாகர், தேவா, பரத்வாஜ் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப் போகிறாராம்.

    அந்தக் காலத்தில் பானுமதி சாதித்ததைப் போல பாட்டு, ஆட்டம், நடிப்பு எனசகலகலா வித்தைக்காரியாக உருவெடுப்பதே தனது லட்சியம் என்கிறார் மம்க்குட்டிமம்தா.


    மம்தாவின் அலம்பலைப் பார்த்து ஏற்கனவே அங்கிருந்து இங்கு வந்து குப்பையைக்கொட்டிக் கொண்டிருக்கும் பல கேரளத்து வரவுகளுக்கு வயிற்றியில் புளியைக்கரைத்தது போல உள்ளதாம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X