Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மணிரத்னம் என்னை ஏமாற்ற மாட்டார்: நம்பிக்கையுடன் காத்திருக்கும் வாரிசு நடிகை
மும்பை: இயக்குனர் மணிரத்னம் தன்னை கைவிட மாட்டார் என்று நம்பிக்கையுடன் காத்துள்ளார் நடிகை சையாமி கேர்.
பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மியின் உறவினரும், பிரபல இந்தி நடிகை உஷா கிரணின் பேத்தியுமானவர் சையாமி கேர். சாய் தரம் தேஜ் ஹீரோவாக நடித்த ரே என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையானார்.
படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
மிர்சியா
சையாமி தற்போது மிர்சியா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். தனது பாட்டி பிரபலமாக இருந்த பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க விரும்புகிறார் சையாமி.
மணிரத்னம்
மணிரத்னம் ஓகே கண்மணி படத்தை முடித்த கையோடு தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார். அந்த படத்தில் துல்கர் சல்மானை ஹீரோவாக போட விரும்பினார். துல்கருக்கு ஜோடியாக சையாமி கேரை தேர்வு செய்தார் மணி. ஆனால் அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு கார்த்தியை வைத்து காற்று வெளியிடை படத்தை இயக்கி வருகிறார்.
சையாமி
மணி சார் படத்தில் நடிக்க அழைத்தார்கள். ஆடிஷனில் தேர்வு செய்யப்பட்டேன். இந்த படத்தை எப்பொழுது நான் எடுத்தாலும் நீ தான் ஹீரோயின் என மணி சார் என்னிடம் தெரிவித்தார் என்கிறார் சையாமி.
நம்பிக்கை
மணி சார் படத்தை கிடப்பில் போட்டாலும் நிச்சயம் அதில் நான் நடிப்பேன் என நம்புகிறேன். அவர் என்னை ஏமாற்ற மாட்டார். அதனால் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று சையாமி தெரிவித்துள்ளார்.