twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாருமே கண்டுகொள்ளவில்லை: இறங்கி வந்த மனிஷா யாதவ்

    By Siva
    |

    சென்னை: பட வாய்ப்புகள் இல்லாததால் மனிஷா யாதவ் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க சம்மதித்துள்ளார்.

    பெங்களூரில் பிறந்து வளர்ந்த மனிஷா யாதவ் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஆந்திரா பக்கம் சென்றவர் அங்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

    Manisha Yadav' timely decision

    ஆந்திரா சென்ற வேகத்தில் தமிழ்நாட்டிற்கு திரும்பியவர் இரண்டு படங்களில் நடித்தார். அதன் பிறகு பாவம் மனிஷாவை யாருமே கண்டுகொள்ளவில்லை. விளைவு அவர் கையில் படங்கள் இல்லை. இப்படி சென்றால் என்ன செய்வது என்று யோசித்தார் மனிஷா.

    சரி, மார்க்கெட் நன்றாக ஆகும் வரை இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு வந்தாலும் கூட நடிக்க வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தார். அந்நேரம் பார்த்து அவரை இரண்டாவது நாயகியாக நடிக்குமாறு கேட்டு த்ரிஷா இல்லன்னா நயன்தாரா தயாரிப்பாளர்கள் வந்தனர்.

    தேடி வந்த வாய்ப்பை கைநழுவவிட விரும்பாத அவர் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதையடுத்து தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். சும்மா இருந்தால் அனைவரும் மறந்துவிடக்கூடும் என்பதால் வரும் வாய்ப்புகளை ஏற்கிறார் மனிஷா.

    English summary
    Manisha Yadav has decided to do second heroine role for now.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X