திடீரென யோகாவில் இறங்கிய நடிகை மஞ்சிமா மோகன்!
கொச்சி : அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.
இப்பொழுது விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிவரும் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் அக்டோபர் 31st லேடீஸ் நைட் என்ற கதையில் நடித்து வரும் மஞ்சிமா மோகன் திடீரென யோகா செய்யத் தொடங்கியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள் கூட்டம்
விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிக்குப் பிறகு மீண்டும் கௌதம் மேனன்,சிம்பு இணைந்த அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தப்பட்ட மஞ்சிமா மோகனுக்கு முதல் படத்திலேயே தமிழில் ரசிகர்கள் கூட்டம் உருவாகின. அதைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் மற்றும் சமீபத்தில் வெளியான காலத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் வெற்றிகளைப் பெற்றுத்தந்தன.

அரசியல் கதை
இப்பொழுது விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். காமெடி கலந்த அரசியல் கதை களத்தை கொண்டு உருவாகி வரும் துக்ளக் தர்பார் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.
Recommended Video

மலையாள ரீமேக்கில்
இந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சில திரைப்படங்கள் சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் பிங்கை தொடர்ந்து கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற குயின் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் மலையாள ரீமேக்கில் நடிகை மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜாம் ஜாம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

யோகா வகுப்புகளை
பார்த்தவுடனே பிடித்து விடும் அளவிற்கு கொழுக்கு மொழுக்கு என இதுக்கும் மஞ்சுமா திடீரென யோகா செய்யத் தொடங்கியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் இது கொரோனா சமயம் என்பதால் ஆன்லைன் மூலமாக யோகா வகுப்புகளை முறையாக எடுத்து வருகிறார். அந்த விதவிதமாக யோகா செய்துள்ள புகைப்படங்களை இப்போது பதிவிட்டு யோகா ஆசிரியருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











