Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய ஆண் அவர்தான்... மஞ்சு வாரியர் ஓபன் டாக்
Recommended Video
சென்னை: தன் வாழ்க்கையில் அதிக ஆதிக்கம் செலுத்திய ஆண் யார் என்பதை நடிகை நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், மஞ்சு வாரியர். நடிகர் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பை பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில் 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரிலீஸ் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் அசுரன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் பச்சையம்மாள் என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர்.
இந்நிலையில் கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், உங்கள் வாழ்க்கையில், ஆதிக்கம் செலுத்திய ஆண் யார் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எல்லோர் வாழ்க்கையில் தந்தைக்கு சிறந்த இடம் உண்டு. எனக்கும் என் அப்பாதான் எல்லாம். என் வாழ்க்கையில் அதிக செல்வாக்கான மனிதரும் ஆதிக்கம் செலுத்தியவரும் அவர்தான். அவர் இழப்பு என்னால் தாங்கிக்கொள்ள முடியாதது. நிவர்த்தி செய்ய முடியாதது என்றார்.