Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திருவனந்தபுரம்: ஊர்வசியின் முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயன் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன் என மலையாள நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
சுந்தர் தாஸ் இயக்கத்தில் திலீப், மஞ்சு வாரியர், மனோஜ் கே. ஜெயன் உள்ளிட்டோர் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான மலையாள படம் சல்லாபம். அந்த படத்தில் திலீப்பும், மஞ்சு வாரியரும் காதலர்கள்.
திலீப் மஞ்சுவை பிரிந்துவிடுவார். இதனால் விரக்தி அடைந்த மஞ்சு உயிரை மாய்த்துக் கொள்ள செல்வார் அப்போது அவரை மனோஜ் கே ஜெயன் காப்பாற்றுவார். இது தான் கதை.
மஞ்சு
இறுதி காட்சி அதாவது தற்கொலை செய்ய முயற்சிக்கும் காட்சியை படமாக்கியபோது தனக்கு நேர்ந்தது குறித்து மஞ்சு வாரியர் தற்போது பேட்டி அளித்துள்ளார்.
தற்கொலை
கதைப்படி ஓடும் ரயில் முன்பு குதிக்க செல்ல வேண்டும் அதற்குள் மனோஜ் வந்து காப்பாற்றுவார். ஆனால் நான் நடிப்பு என்பதை மறந்து கதாபாத்திரமாகவே மாறி ஓடும் ரயிலில் குதிக்க பார்த்தேன் என்று மஞ்சு தெரிவித்துள்ளார்.
மனோஜ்
நான் கதாபாத்திரமாகவே மாறி ரயில் முன்பு குதிக்க சென்றபோது மனோஜ் ஓடி வந்து தடுத்தும் அவரை தள்ளிவிட்டு சென்றேன். இதை உணர்ந்த மனோஜ் வந்து என் கையை பிடித்து இழுத்து ஓங்கி ஒரு அறை கொடுத்தார் என்று கூறியுள்ளார் மஞ்சு.
அறை
மனோஜ் ஓங்கி அறைந்த பிறகு தான் நான் செய்யவிருந்த தவறு புரிந்து மயங்கி விழுந்தேன். அவர் மட்டும் என்னை காப்பாற்றாமல் இருந்திருந்தால் அன்றே நான் இறந்திருப்பேன் என்கிறார் மஞ்சு.