Don't Miss!
- Sports தவிக்க விட்டுட்டாரே.. ரோஹித் செயலால் நொந்து போன ஹர்திக் பாண்டியா.. தோனியை பார்த்து கதறல்
- Automobiles டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
- News ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வெல்வரா?அனுதாப அலையால் அதிமுகவுக்கு ஷாக்.. தந்தி டிவி சர்வேயில் ட்விஸ்ட்
- Lifestyle உங்க முகத்தில் சுருக்கங்கள் வந்து வயசான மாதிரி தெரியுறீங்களா? அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
இயக்குனர் சுசி கணேசன் எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்: அமலா பால் #MeToo
Recommended Video
சென்னை: இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள லீனா மணிமேகலை சொல்வது எல்லாம் உண்மை என்கிறார் நடிகை அமலா பால்.
இயக்குனர் சுசி கணேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த சுசி கணேசன் ரூ. 1 நஷ்டஈடு கேட்டு லீனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் நடிகை அமலா பால் லீனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
[நிஜ வாழ்க்கையில் த்ரிஷாவின் 'ராம்' யார்?]
கணேசன்
நான் லீனா மணிமேகலையின் இயக்குனர் சுசி கணேசனின் மீதான குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குனராக அந்த பெண் என்ன பாடுபட்டு இருப்பாள் என்பது எனக்கு புரிகிறது. நான் அவர் இயக்கிய திருட்டுப் பயலே 2 படத்தின் கதாநாயகியாக இருந்தாலும் இயக்குனர் சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடல் ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடு பட்டிருப்பார் என்பதை நான் அறிகிறேன்.
மீ டூ
அந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லி இருப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இன்றைய பொருளாதார நிலையும், பெருகி வரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை ஒரு எளிய இரையாக்கி விடுகிறது. அங்கிங்கு எனாது படி அனைத்து தொழில்களிலும், துறைகளிலும் இந்த கொடுமை நடந்து வருகிறது.
மகள்
தங்களது மனைவியையும், மகள்களையும் போற்றி காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையை செலுத்துவது துரதிர்ஷ்டவசமானது. இதுவே இந்தியர்களாகிய நாம் நம்முடைய உண்மையான ஆற்றலை கலை, சேவை மற்றும் ஆன்மீக துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது.
|
கலை துறை
ஆன்மீக துறையிலும், கலை துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளி வரத் துவங்கி உள்ளது. இதே போல மற்ற துறைகளிலும் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மற்ற துறைகளில் இருந்தும் #metoo குறித்த பதிவுகள் வெளி வர வேண்டும். அரசாங்கமும், நீதி துறையும் எதிர்காலத்தில் இவ்வித கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி பெண்களுக்கு தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களை போக பொருளாக சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும் என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.