twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத் திரையில் மீனா இதுவரை சின்னத் திரையில் நடிக்க வந்த வாய்ப்புக்களையெல்லாம் தவிர்த்து வந்த மீனா ஒரு வழியாய் டிவிக்கு வந்தே விட்டார்.ஹீரோயின் வாய்ப்பெல்லாம் இனிமேல் இல்லை என்பது உறுதியாகிவிட்டதால் தான் இந்த முடிவுக்கு வந்தாராம். தமிழில்கதாநாயகி வாய்ப்பு போயே போச்சு என்பதால் கன்னடம், மலையாளம் பக்கம் போய் கிடைத்த காசுக்கு ஏற்றபடி கிளாமர் காட்டிஹீரோயினாக வலம் வந்து பார்த்தார்.இப்போதும் அதுவும் ஓவர். அங்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டதால் டிவிக்கு ஓகே சொல்லிவிட்டாராம். அதே நேரத்தில்மெகா சீரியல்களில் நடிக்க மறுத்துவிட்ட மீனா, கேம் ஷோவுக்கு மட்டும் தலையை ஆட்டியிருக்கிறார். அதன்படி ஜெயா டிவியில் ஹவுஸ் புல் என்ற எஸ்.எம்.எஸ். பேஸ்ட் நிகழ்ச்சியொன்றை நடத்தப் போகிறார்.இதற்கிடையே மீனாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் அவரது அம்மா மல்லிகா தீவிரமாக இருக்கிறார். இதுவரைமீனாவின் விருப்பம் இல்லாமலேயே மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார் மல்லிகா.ஆனால், மீனாவின் ஒப்புதல் இல்லாமல் போனதால் எதுவும் செட்டாகவில்லை. இப்போது மீனாவே திருமணத்துக்கு ஒப்புக்கொண்டுவிட்டாராம். அதே நேரத்தில் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டிருக்கிறாராம். இதற்கிடையே வாஸ்து சரியில்லை என்று தான் வசித்து வந்த சாலிகிராமம் பங்களாவை வாடகைக்கு விட்டுவிட்டுசைதாப்பேட்டையில் வீடு வாங்கி குடி வந்தார் மீனா. இப்போது அந்த வீட்டிலும் வாஸ்து சரியில்லை என்றும் அதை சரிசெய்தால் தான் மகளுக்கு சரியான இடத்தில் வரன அமையும் என்றும் ஜோசியம் பார்ட்டி ஒருவர் கூறிவிட்டாராம்.இதனால் அந்த வீட்டை வாஸ்துப்படி மாற்றி அமைத்திருக்கிறார்கள். சமீப காலமாக வீட்டில் சும்மா இருந்த நேரத்தில் மீனா ஒருநல்ல காரியத்தை செய்திருக்கிறார் தெரியுமா?. நீண்டகாலமாக அவர் படித்துக் கொண்டிருந்த எம்.ஏ. வரலாறு முதலாமாண்டுதேர்வை எழுதிவிட்டாராம்.நல்லபடியா செட்டில் ஆனா சரி.மீனாவைப் போலவே டிவிக்குப் போயுள்ள இன்னொரு பார்ட்டி மாதவன். ஒரு கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை தன்வீட்டுப் பக்கமே வர விடாமல் மிரட்டிய மாதவனுக்கு கையில் சுத்தமாக பட வாய்ப்புக்கள் இல்லை. அவரது ஆஸ்தான இயக்குனர் மணி ரத்னமும் ஏதும் படமெடுப்பது போலத் தெரியவில்லை. இதையடுத்து சினிமா சான்ஸைஎதிர்பார்த்தபடியே மீண்டும் டிவிக்கே திரும்பியிருக்கிறார் மேடி.முன்பு இந்தி சேனல்களில் மெகா சீரியல்களில் நடித்தவர் தான் மாதவன் என்பது உங்களுக்குத் தான் தெரியுமே. இப்போது சோனிடிவியில் ஒரு கேம் ஷோ நடத்த மாதவனை பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.அமிதாப் நடத்தும் கோன் பனேகா கரோர்பதி மாதிரி ரூ. 2 கோடி வரை வெல்லும் நிகழ்ச்சியாம் இது. டீல் யா நோ டீல் என்பதுதான் நிகழ்ச்சியின் பெயர்.குச் குச் ஹோத்தா ஹை!

    By Staff
    |

    இதுவரை சின்னத் திரையில் நடிக்க வந்த வாய்ப்புக்களையெல்லாம் தவிர்த்து வந்த மீனா ஒரு வழியாய் டிவிக்கு வந்தே விட்டார்.

    ஹீரோயின் வாய்ப்பெல்லாம் இனிமேல் இல்லை என்பது உறுதியாகிவிட்டதால் தான் இந்த முடிவுக்கு வந்தாராம். தமிழில்கதாநாயகி வாய்ப்பு போயே போச்சு என்பதால் கன்னடம், மலையாளம் பக்கம் போய் கிடைத்த காசுக்கு ஏற்றபடி கிளாமர் காட்டிஹீரோயினாக வலம் வந்து பார்த்தார்.

    இப்போதும் அதுவும் ஓவர். அங்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டதால் டிவிக்கு ஓகே சொல்லிவிட்டாராம். அதே நேரத்தில்மெகா சீரியல்களில் நடிக்க மறுத்துவிட்ட மீனா, கேம் ஷோவுக்கு மட்டும் தலையை ஆட்டியிருக்கிறார்.


    அதன்படி ஜெயா டிவியில் ஹவுஸ் புல் என்ற எஸ்.எம்.எஸ். பேஸ்ட் நிகழ்ச்சியொன்றை நடத்தப் போகிறார்.

    இதற்கிடையே மீனாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் அவரது அம்மா மல்லிகா தீவிரமாக இருக்கிறார். இதுவரைமீனாவின் விருப்பம் இல்லாமலேயே மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார் மல்லிகா.

    ஆனால், மீனாவின் ஒப்புதல் இல்லாமல் போனதால் எதுவும் செட்டாகவில்லை. இப்போது மீனாவே திருமணத்துக்கு ஒப்புக்கொண்டுவிட்டாராம். அதே நேரத்தில் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டிருக்கிறாராம்.


    இதற்கிடையே வாஸ்து சரியில்லை என்று தான் வசித்து வந்த சாலிகிராமம் பங்களாவை வாடகைக்கு விட்டுவிட்டுசைதாப்பேட்டையில் வீடு வாங்கி குடி வந்தார் மீனா. இப்போது அந்த வீட்டிலும் வாஸ்து சரியில்லை என்றும் அதை சரிசெய்தால் தான் மகளுக்கு சரியான இடத்தில் வரன அமையும் என்றும் ஜோசியம் பார்ட்டி ஒருவர் கூறிவிட்டாராம்.

    இதனால் அந்த வீட்டை வாஸ்துப்படி மாற்றி அமைத்திருக்கிறார்கள். சமீப காலமாக வீட்டில் சும்மா இருந்த நேரத்தில் மீனா ஒருநல்ல காரியத்தை செய்திருக்கிறார் தெரியுமா?. நீண்டகாலமாக அவர் படித்துக் கொண்டிருந்த எம்.ஏ. வரலாறு முதலாமாண்டுதேர்வை எழுதிவிட்டாராம்.

    நல்லபடியா செட்டில் ஆனா சரி.

    மீனாவைப் போலவே டிவிக்குப் போயுள்ள இன்னொரு பார்ட்டி மாதவன். ஒரு கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை தன்வீட்டுப் பக்கமே வர விடாமல் மிரட்டிய மாதவனுக்கு கையில் சுத்தமாக பட வாய்ப்புக்கள் இல்லை.


    அவரது ஆஸ்தான இயக்குனர் மணி ரத்னமும் ஏதும் படமெடுப்பது போலத் தெரியவில்லை. இதையடுத்து சினிமா சான்ஸைஎதிர்பார்த்தபடியே மீண்டும் டிவிக்கே திரும்பியிருக்கிறார் மேடி.

    முன்பு இந்தி சேனல்களில் மெகா சீரியல்களில் நடித்தவர் தான் மாதவன் என்பது உங்களுக்குத் தான் தெரியுமே. இப்போது சோனிடிவியில் ஒரு கேம் ஷோ நடத்த மாதவனை பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.

    அமிதாப் நடத்தும் கோன் பனேகா கரோர்பதி மாதிரி ரூ. 2 கோடி வரை வெல்லும் நிகழ்ச்சியாம் இது. டீல் யா நோ டீல் என்பதுதான் நிகழ்ச்சியின் பெயர்.

    குச் குச் ஹோத்தா ஹை! (ஏதோ, நமக்குத் தெரிந்த இந்தி..)

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X