கொந்தளித்த மீனா! கேட்ககூடாத கேள்வியைக் கேட்டு பெறக் கூடாத பதிலைப் பெற்று வந்துள்ளார் இயக்குநர் ஒருவர்.கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட சில தமிழ் நடிகைகளில் கண்ணழகி மீனாவும் ஒருவர். சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினி காந்த்,கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த் என முக்கியப் புள்ளிகளுடன் ரவுண்டு வந்தவர் மீனா.ஆனால் மும்பை, கேரள நடிகைகளின் வரத்து அதிகரித்ததால் அம்புட்டு பேரும் மீனாவை அம்போவென்று விட்டு விட்டனர்.ஆனாலும் மீனா இதுகுறித்துக் கவலைப்படவில்லை.இப்படியே இருந்தால் ரசிகர்கள் மறந்துப்புடுவாங்க, எனவே என்ன ரோல் வந்தாலும் செய்யம்மா என்று மீனாவின் அம்மாஅவருக்கு அட்வைஸ் வழங்கினார். இதைத் தொடர்ந்து சில குத்துப் பாட்டுக்களுக்கு ஆடி அசத்தினார் மீனா.விஜய் படத்தில் சரக்கு வெச்சிருக்கேன், இறக்கி வச்சுருக்கேன் என்று மீனா போட்ட ஆட்டம் இன்றும் கூட ரசிகர்களால் மறக்கமுடியவில்லை. விஜய்யைத் தவிர அஜீத்துடன் நடித்துள்ளார் மீனா. இதுதவிர அவ்வப்போது சின்னச் சின்னப் படங்களில் தலைகாட்டியும் வருகிறார்.சரி இப்போது மேட்டருக்கு வருவோம் . சமீபத்தில் ஒரு இயக்குநர் மீனாவின் வீட்டுக்குப் போயுள்ளார். வந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்ற பதட்டத்தில் இயக்குநரை அமர வைத்து என்ன விஷயம் என்று கட்டுள்ளார் மீனா.அதற்கு அந்த இயக்குநர், நான் இயக்கப் போகும் படத்த்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கன்ெனநடிச்சுட்டாப் போச்சு என்று கூறியுள்ளார் மீனா. சரி எனக்கு எந்த மாரியான கேரக்டர் என்று கேட்டார் மீனா.அதாவது நீங்க, ஸ்ரீகாந்த்துக்கு அண்ணியாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குநர். இதை எதிர்பார்க்காத மீனா கடும்கோபமாகி விட்டார். அருகில் இருந்த அவரது அம்மா மல்லிகாவோ கோபத்தின் உச்சிக்கேப் போய் விட்டார்.என்ன நினைத்து இப்படி ஒரு வார்த்தையை சொன்னீர்கள்.? எனக்கு இன்னும் வயது இருக்கிறது. நான் நடிக்க வேண்டிய வேடம்நிறைய உள்ளது. அதற்குள் அண்ணி வேடம் என்று வந்து விட்டீர்கள். நான் ரஜினி, கமலுடன் நடித்த நடிகையாக்கும் என்றுகோபவேசமாக பேசி இயக்குநரை வெளயேற்றி விட்டார்களாம்.அப்படியும் ஆவேசம் தாங்காமல் மீனா அவதிப்பட்டதால் அவரைக் கூட்டிக் கொண்டு சிட்டிக்குள் ஒரு ரவுண்டு போய் விட்டுவந்தாராம் அம்மா மல்லிகா. இப்படித்தான் சுஹாசினியைக் கூப்பிட்டு கமலுக்கு அம்மா வேடத்தில் நடிக்குமாறு முன்பு ஒருவர்கேட்டு அவரை டென்ஷன் செய்தார். இப்போது மீனாவிடம் அந்த உத்தியை கடைப்பிடிக்க பார்த்திருக்கிறார்கள்.ஆனால் ரஜினிக்கு அம்மாவாக நடிக்க நான் தயார் என்று மீனாவே முன்பு அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். அதைசீரியஸாக எடுத்துக் கொண்டு அந்த இயக்குநர் போய் அண்ணி வேடத்திற்கு மீனாவை அழைத்தாரோ என்னவோ?மீனா இப்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் டிவி பக்கம் வரப் போகிறார். ஜெயா டிவியில் விரைவில்ஒளிபரப்பாகவுள்ள ஒரு நிகழ்ச்சியில் மீனா கலந்து கொள்கிறார். அது என்ன மாதிரியான நிகழ்ச்சி என்பதை சஸ்பென்ஸ் ஆகவைத்துள்ளார்கள்.அப்ப கல்யாணம்.? அதுவும் ஒரு பக்கம் ஏற்பாடாகி வருகிறதாம். சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு மாப்பிள்ளையை பார்த்துவைத்துள்ளாராம் மல்லிகா. கூடிய விரைவில் டும் டும் கொட்டப் போகிறார்கள்.மீனா அப்ப அவ்வளவுதானா?

By Staff

கேட்ககூடாத கேள்வியைக் கேட்டு பெறக் கூடாத பதிலைப் பெற்று வந்துள்ளார் இயக்குநர் ஒருவர்.

கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட சில தமிழ் நடிகைகளில் கண்ணழகி மீனாவும் ஒருவர். சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினி காந்த்,கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த் என முக்கியப் புள்ளிகளுடன் ரவுண்டு வந்தவர் மீனா.

ஆனால் மும்பை, கேரள நடிகைகளின் வரத்து அதிகரித்ததால் அம்புட்டு பேரும் மீனாவை அம்போவென்று விட்டு விட்டனர்.ஆனாலும் மீனா இதுகுறித்துக் கவலைப்படவில்லை.

இப்படியே இருந்தால் ரசிகர்கள் மறந்துப்புடுவாங்க, எனவே என்ன ரோல் வந்தாலும் செய்யம்மா என்று மீனாவின் அம்மாஅவருக்கு அட்வைஸ் வழங்கினார். இதைத் தொடர்ந்து சில குத்துப் பாட்டுக்களுக்கு ஆடி அசத்தினார் மீனா.


விஜய் படத்தில் சரக்கு வெச்சிருக்கேன், இறக்கி வச்சுருக்கேன் என்று மீனா போட்ட ஆட்டம் இன்றும் கூட ரசிகர்களால் மறக்கமுடியவில்லை. விஜய்யைத் தவிர அஜீத்துடன் நடித்துள்ளார் மீனா. இதுதவிர அவ்வப்போது சின்னச் சின்னப் படங்களில் தலைகாட்டியும் வருகிறார்.

சரி இப்போது மேட்டருக்கு வருவோம் . சமீபத்தில் ஒரு இயக்குநர் மீனாவின் வீட்டுக்குப் போயுள்ளார். வந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்ற பதட்டத்தில் இயக்குநரை அமர வைத்து என்ன விஷயம் என்று கட்டுள்ளார் மீனா.

அதற்கு அந்த இயக்குநர், நான் இயக்கப் போகும் படத்த்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கன்ெனநடிச்சுட்டாப் போச்சு என்று கூறியுள்ளார் மீனா. சரி எனக்கு எந்த மாரியான கேரக்டர் என்று கேட்டார் மீனா.

அதாவது நீங்க, ஸ்ரீகாந்த்துக்கு அண்ணியாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குநர். இதை எதிர்பார்க்காத மீனா கடும்கோபமாகி விட்டார். அருகில் இருந்த அவரது அம்மா மல்லிகாவோ கோபத்தின் உச்சிக்கேப் போய் விட்டார்.

என்ன நினைத்து இப்படி ஒரு வார்த்தையை சொன்னீர்கள்.? எனக்கு இன்னும் வயது இருக்கிறது. நான் நடிக்க வேண்டிய வேடம்நிறைய உள்ளது. அதற்குள் அண்ணி வேடம் என்று வந்து விட்டீர்கள். நான் ரஜினி, கமலுடன் நடித்த நடிகையாக்கும் என்றுகோபவேசமாக பேசி இயக்குநரை வெளயேற்றி விட்டார்களாம்.

அப்படியும் ஆவேசம் தாங்காமல் மீனா அவதிப்பட்டதால் அவரைக் கூட்டிக் கொண்டு சிட்டிக்குள் ஒரு ரவுண்டு போய் விட்டுவந்தாராம் அம்மா மல்லிகா. இப்படித்தான் சுஹாசினியைக் கூப்பிட்டு கமலுக்கு அம்மா வேடத்தில் நடிக்குமாறு முன்பு ஒருவர்கேட்டு அவரை டென்ஷன் செய்தார். இப்போது மீனாவிடம் அந்த உத்தியை கடைப்பிடிக்க பார்த்திருக்கிறார்கள்.


ஆனால் ரஜினிக்கு அம்மாவாக நடிக்க நான் தயார் என்று மீனாவே முன்பு அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். அதைசீரியஸாக எடுத்துக் கொண்டு அந்த இயக்குநர் போய் அண்ணி வேடத்திற்கு மீனாவை அழைத்தாரோ என்னவோ?

மீனா இப்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் டிவி பக்கம் வரப் போகிறார். ஜெயா டிவியில் விரைவில்ஒளிபரப்பாகவுள்ள ஒரு நிகழ்ச்சியில் மீனா கலந்து கொள்கிறார். அது என்ன மாதிரியான நிகழ்ச்சி என்பதை சஸ்பென்ஸ் ஆகவைத்துள்ளார்கள்.

அப்ப கல்யாணம்.? அதுவும் ஒரு பக்கம் ஏற்பாடாகி வருகிறதாம். சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு மாப்பிள்ளையை பார்த்துவைத்துள்ளாராம் மல்லிகா. கூடிய விரைவில் டும் டும் கொட்டப் போகிறார்கள்.

மீனா அப்ப அவ்வளவுதானா?

Read more about: director makes meena tension
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X