Don't Miss!
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
காலையிலயே பண்ற வேலையா இது? தூக்கமில்லாம பிரபல ஹீரோயின் செய்த வேலைய பாருங்க! கலாய்க்கும் ஃபேன்ஸ்!
மும்பை: பிரபல ஹீரோயின் தூக்கமில்லாமல் காலையிலேயே பதிவிட்டுள்ள போட்டோவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
தமிழில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, அன்பே ஆருயிரே படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், நிலா.
அடுத்து, பிரசாந்தின் ஜாம்பவான், சிபி ராஜின் லீ, அர்ஜூனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார்.
இப்படி செஞ்சா.. அந்த பிரச்சனையை குறைக்கலாம்.. பிக்பாஸ் பிரபலம் கொடுத்த ஐடியா.. நெட்டிசன்ஸ் கலாய்!
மீரா சோப்ரா
அப்படியே தெலுங்கிலும் நடித்து வந்த நிலா, பிறகு தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். இந்திப் படங்களில் நடித்தார். இடையில் சிறிது காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் 'செக்ஷன் 375' என்ற படம் வெளியாகி இருந்தது.
வெப் சிரீஸில்
இப்போது அர்ஜூன் ராம்பால் ஜோடியாக நாஸ்திக் படத்தில் நடித்துள்ளார். சைலேஷ் வர்மா இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதில் ஹர்ஷாலி மல்கோத்ரா, திவ்யா தத்தா, ரவிகிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். அமிதாப்பச்சன் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இதையடுத்து வெப் சிரீஸில் நடிக்கிறார் மீரா சோப்ரா.
லாக்டவுன்
பிரபல நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா ஆகியோரின் உறவினரான இவர், லாக் டவுனால், உடல் எடை அதிகரித்துவிட்டதோ என்று சந்தேகம் கொண்டதாகவும் தூக்கத்தைச் சுத்தமாக இழந்துவிட்டேன் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றையும் கிளாமர் போட்டோவையும் வெளியிட்டிருந்தார்.
View this post on InstagramSigns of insomnia, putting a pic at 5.30am!!! 🙄
A post shared by Meera Chopra (@meerachopra) on
தூக்கமின்மை
இந்நிலையில், இன்று புதிய கிளாமர் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக, 'தூக்கமின்மையின் விளைவு, காலை 5.30 மணிக்கே இந்த போட்டோவை பதிவு செய்கிறேன்' என்று தெரிவித்துள்ளார் மீரா சோப்ரா. இந்தப் போட்டோவை ஏராள மானோர் லைக் செய்துள்ளனர். ரசிகர்கள் அவருக்கு கமென்ட்களை அள்ளித் தெளித்துள்ளனர்.
பரபரப்பு கிளப்பவா?
'அதே பிரச்னைதான் எனக்கும். அதனால இந்த நேரத்துலயும் தேடி வந்து 5.30 மணிக்கே இதை லைக் பண்றேன்' என்று ஒருவர் தெரிவித்துள்ளார். அதிகாலையில போடற போட்டோவா இது? பரபரப்பை கிளப்பறதுக்குன்னே இந்த மாதிரி போட்டோ போடறீங்களா? என்று சிலர் கலாய்த் துள்ளனர்.
View this post on InstagramA post shared by Meera Chopra (@meerachopra) on
கிராமர் வகுப்பு
ஒரு நெட்டிசன், இன்னொருவர் சில்ரன்ஸ் என்று எழுதியிருந்ததை குறிப்பிட்டு, சைல்ட் என்பதன் பன்மைதான், சில்ரன். பிறகு எதுக்கு சில்ரன்ஸ்? என்று ஆங்கில கிராமர் வகுப்பு எடுத்துள்ளார். அப்போ பார்த்ததுக்கும் இப்போ பார்க்கிறதுக்கும் உங்ககிட்ட ஒரு வித்தியாசமும் இல்ல. நீங்க அதே அழகோட இருக்கீங்க? என்று ஒருவரும் காலையிலயே பண்ற வேலையா இது? என்று இன்னொரு ரசிகரும் கேட்டுள்ளனர்.
புது போட்டோ
காலைல எழுந்ததும் பார்க்கிற முதல் போட்டோ, இது. ஒர்த்தானதுதான் என்று சிலர் வழிந்துள்ளனர். ஏதாவது புது போட்டோவா போடுங்கம்மா என்று சிலரும் முன்னழகு ஓகே, பின்னழகு? என்று கேட்டுள்ளனர். சில ரசிகர்கள், நீங்கள் செக்ஸியாக இருக்கிறீர்கள். விரைவில் தென்னிந்திய படங்களில் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்