'அப்ப கண்டுக்காம விட்டுட்டோம், இப்ப நீங்க' தாறுமாறு போஸில் ஹீரோயின்..சென்டிமென்ட் டச்சில் ஃபேன்ஸ்
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Recommended Video
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எண்ணிக்கை
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 53,866 -ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 6,86,395 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20,96,665 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 28,36,926 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பொருளாதாரச் சிக்கல்
இந்த வைரஸ் கட்டுக்குள் இல்லாததால் உலக நாடுகள் தவித்து வருகின்றன. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.89 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. பல நாடுகளில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 5 மாதமாக விதிக்கப்பட்டுள்ள இந்த லாக்டவுன் காரணமாக, பலர் பொருளாதாரச் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

நடனம், த்ரோபேக்
கொரோனா காரணமாக நடிகர், நடிகைகள், வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் தங்கள் ஒர்க் அவுட், நடனம், த்ரோபேக் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகை மீரா சோப்ரா என்கிற நிலாவும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அடிக்கடி போட்டோ பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சிரிக்கும்போது
அவர் இப்போது வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோ, வைரலாகி வருகிறது. இதற்கு கேப்ஷனாக, நீங்கள் சிரிக்கும்போது, வாழ்க்கை சிறப்பாக மாறுகிறது என்று கூறியுள்ளார். இதற்கு லைக்ஸும் கமென்ட்டும் குவிந்திருக்கிறது. சிலர், 'ஆனா, நீங்க சிரிக்கலையே, புன்னகை மட்டும்தான் பண்றீங்க' என்று கூறியுள்ளனர். பலர் அவரை அப்படி இப்படி என்று புகழ்ந்துள்ளனர்.

சரியாக கண்டுக்கலை
ஒருவர், கல்லூரி மாணவி மாதிரியே இருக்கீங்க, கொள்ளை அழகு என்று வர்ணித்துள்ளார். இன்னொரு நெட்டிசன், இதே மாதிரி போட்டோ போட்டபடி இருந்தா, எங்க வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். சில தமிழ் ரசிகர்கள், 'நீங்க தமிழ்ல நடிக்கும்போது உங்களை நாங்க சரியாக கண்டுக்கலை. பத்து வருஷத்துக்குப் பிறகு, அப்ப இருந்ததை விட ஹாட்டா இருக்கறீங்க என்று சென்டிமென்டாக கூறியுள்ளார்.

ஐடியா இல்லையா?
இவ்வளவு வருஷமும் அதே அழகை மெயின்டெயின் பண்றீங்களே எப்படி என்று சிலர் கேட்டுள்ளனர். நீங்க என்னோட பேவரைட் நடிகை என்று சிலரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் போட்டோவை பார்க்கிறேன், தமிழ்ல திரும்பவும் நடிக்கிற ஐடியா இல்லையா என்று சிலர் கேட்டுள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

அன்பே ஆருயிரே
நடிகை மீரா சோப்ரா, நிலா என்ற பெயரில் எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தில் அறிமுகமானார். பிரஷாந்தின் ஜாம்பவான், சிபிராஜின் லீ, அர்ஜுனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தியில் நடித்து வந்த இவர், இடையில் சில காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











