Don't Miss!
- News பாஜகவிற்கு இடியாக வந்து இறங்கிய அகிலேஷ் முடிவு! உ.பியில் தாமரை குலுங்க போகுது! போச்சு எல்லாம் போச்சு
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆமாங்க... பிப் 12-ல் எனக்கு திருமணம்!- உறுதிப்படுத்திய மீரா ஜாஸ்மின்
திருவனந்தபுரம்: வரும் பிப்ரவரி 12-ம் தேதி திருமணம் என்று வெளியான தகவல்கள் உண்மைதான் என உறுதிப்படுத்தினார் நடிகை மீரா ஜாஸ்மின்.
தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீரா ஜாஸ்மின். மலையாளத்திலும் தொடர்ந்து முதல் நிலையில் இருந்தார்.
சர்ச்சைகளுக்கு, கிசுகிசுகளுக்குப் பஞ்சமில்லாத நாயகி.
இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் சேர்ந்து வாழ்வதாக கூறப்பட்டது. இதை அவர் மறுக்கவும் இல்லை.
புதிய படங்களிலும் அவர் அதிகமாக நடிக்காமலிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டைடஸ் - சுகுதகுமாரி மகன் அனில் ஜான் டைடஸுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனில் ஜான் துபாயில் கம்ப்யூட்டர் எஞ்ஜினீயராக உள்ளார்.
திருமண தகவல்கள் வெளியானாலும், அது குறித்து மீரா ஜாஸ்மின் எதுவும் சொன்னதில்லை. மவுனம் காத்தார்.
இப்போது முதல்முறையாக அனில் ஜானுடனான திருமண தகவல் உண்மைதான் என்றும் வரும் பிப்ரவரி 12-ம்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள பாளையம் எல்எம்எஸ் சர்ச்சில் திருமணம் நடைபெறுவதையும் உறுதி செய்துள்ளார்.