Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பலாத்காரம் செய்யும் ஆண்களின் 'அதை' நீக்க வேண்டும்: மீரா ஜாஸ்மீன் ஆவேசம்
கொச்சி: பெண்களை பலாத்காரம் செய்பவர்களின் ஆண்மையை நீக்குவது தான் அவர்களுக்கு அளிக்கும் சரியான தண்டனை என நடிகை மீரா ஜாஸ்மீன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தந்தையே பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமை கூட கலாச்சாரம், பண்பாட்டிற்கு பெயர் போன இந்தியாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து நடிகை மீரா ஜாஸ்மீன் கொச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாலியல் பலாத்காரம் செய்பவர்களின் ஆண்மையை நீக்குவது தான் அவர்களுக்கு அளிக்கும் சரியான தண்டனை. அவ்வாறு செய்தால் தான் பெண்களை தொட பயம் வரும்.
தற்போது இருக்கும் சட்டங்கள் பலாத்கார குற்றங்களை தடுக்க சரியானவை இல்லை என்றார்.
பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பத்து கல்பனாக்கள் மலையாள படத்தில் மீரா ஜாஸ்மீன் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.