Just In
- 5 hrs ago
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- 6 hrs ago
அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!
- 7 hrs ago
ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!
- 8 hrs ago
திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா? வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்!
Don't Miss!
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Lifestyle
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தனிப்பட்ட விருப்பங்களுக்கு என்னை அவர் பயன்படுத்திக்கொண்டார்... பிரபல ஹீரோயின் பகீர் புகார்
கொச்சி: தனது தனிப்பட்ட விருப்பங்களுக்காக அவர் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று நடிகை மீரா வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
தமிழில், உன்னைச் சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உட்பட சில படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன்.
இவர், மலையாளத்தின் மோகன்லால் ஜோடியாக, தன்மத்ரா என்ற படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானாலும் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இப்போது சில மலையாள படங்களில் நடித்துவருகிறார்.

திருமணம்
இவர், பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன், விஷாலை காதலித்து 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

விவாகரத்து
இதையடுத்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். இதுவும் நீடிக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அரிஹா என்ற மகன் உள்ளார்.

மானேஜர்தான்
இந்நிலையில், மலையாள சினிமாவில், தான் நல்ல நிலைக்கு வராததற்கு தனது மானேஜர்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார் மீரா வாசுதேவன். அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.

முழுதாக நம்பினேன்
அவர் மேலும் கூறும்போது, தன்மத்ரா படம் ஹிட்டானதும் எனக்கு அதிக வாய்ப்புகள் வந்தன. எனக்கு மொழி பிரச்னை இருந்ததால், அப்போது எனது மானேஜரை முழுமையாக நம்பினேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு.

தனிப்பட்ட விருப்பம்
அவர் என்னைத் தனது தனிப்பட்ட விருப்பங்களுக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர் சொன்னதை நம்பி பல படங்களின் கதைகளை கூட கேட்காமல் கால்ஷீட் கொடுத்தேன். அவை அனைத்தும் தோல்வி படங்களாக அமைந்தன. முன்னணி இயக்குனர்கள் பலர், என்னை வைத்து படம் இயக்க நினைத்திருந்தனர் என்பதை பிறகுதான் தெரிந்துகொண்டேன்.

மற்ற நடிகைகள்
அந்த மானேஜர், எனக்கு வந்த பல வாய்ப்புகளை தடுத்தார். அந்த வாய்ப்புகளை தனக்கு வேண்டிய மற்ற நடிகைகளுக்கு கொடுத்தார். அப்போது நான் மும்பையில் இருந்ததால் இந்த விஷயங்கள் தெரியாது என்று தெரிவித்துள்ளார் மீரா வாசுதேவன்.