Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நயன்தாரா இடம் எனக்கு வேண்டாம்! - மேக்னா
காதல் சொல்ல வந்தேன் மூலம் நல்ல நடிகையாக பெயர் வாங்கிய மேக்னா ராஜ், இப்போது 'உயர்திரு 420' படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் அறிமுகமாகியும் பெரிய வாய்ப்பு அமையாததில் வருத்தமா?
இந்தக் கேள்விக்கு மேக்னா பதிலளிக்கையில், "மலையாளத்தில் நல்ல படங்கள் கிடைத்தன. ஸ்டார் பட வாய்ப்புகளால் மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் சூப்பர் ஹிட். தமிழில் ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் 'உயர்திரு 420' பட வாய்ப்பு கிடைத்தது.
கவிஞர் சினேகன் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்திய படங்களின் எந்த சாயலும் இல்லாத ஒரு திரைக்கதை. இனி நல்ல நல்ல வாய்ப்புகளை இந்தப் படம் ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.
அடுத்த நயன்தாரா நீங்கதானா?
"நான் நயன்தாரா போல் இருப்பதாக நிறைய பேர் சொல்லுகிறார்கள். மீடியாக்களும் என்னை அவருடன் ஒப்பிட்டு பேசுகின்றன. நயன்தாரா இடத்தை நீங்கள் பிடிப்பீர்களா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நயன்தாராவின் நடிப்பு எனக்கு பிடித்தமான ஒன்றுதான். ஆனால், எனக்கான இடம் அவருடையது அல்ல. எனக்கென தனி இடம் இருக்கிறது. அதற்கு என்னைத் தயார்ப்படுத்தி வருகிறேன். நயன்தாராவின் திருமணம் குறித்து கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. அது எனக்கு தேவையில்லாத விஷயமும் கூட,'' என்றார்.