நடிகை குஷ்பு வழக்கு தள்ளிவைப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த வக்கீல் முருகன் நடிகை குஷ்பு மீது மேட்டூர் குற்றவியல் இரண்டாவது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நடிகை குஷ்பு நேரில் ஆஜராகி திரும்பும் போது அவர் மீது அழுகிய தக்காளி, முட்டை ஆகியவற்றை ஒரு கும்பல் வீசியது.
இது குறித்து மேட்டூர் தாசில்தார் மேட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பா.ம.க. பிரமுகர் அறிவழகன் உள்பட 41 பேர் மீது மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை மேட்டூர் குற்றவியல் நீதிமன்ற எண்-1-ல் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் முக்கிய சாட்சிகள் யாரும் ஆஜராகாததால் இந்த வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் மீண்டும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 23-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications