மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபரப்பு குற்றச்சாட்டு

By Siva

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான கேரள தொழில் அதிபர் சரிதா நாயர் தான் எழுதிய கடிதத்தில் மலையாள நடிகர் மோகன்லால் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார் என்று உள்ளூர் செய்தி தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சரிதா நாயர். அவர் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் சோலார் பேனல்களை பொருத்திக் கொடுக்கிறேன் என்று கூறி கேரளா மற்றும் தமிழகத்தில் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

Mohanlal Mentioned In Saritha Nair's Letter!

அவர் சிறையில் இருக்கையில் எழுதியதாகக் கூறி 28 பக்கங்கள் கொண்ட கடிதத்தை கேரள மீடியாக்கள் வெளியிட்டன. அதில் கேரள மாநில நிதி அமைச்சர் கே. மணியின் மகனும், எம்.பி.யுமான ஜோஸ் மணி தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதா எழுதியிருந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்றும், அந்த கடிதமே போலி என்றும் சரிதா தெரிவித்துள்ளார்.

ஜாமீனில் வெளியே வந்த அவர் தான் எழுதிய உண்மையான கடிதத்தை செய்தியாளர்கள் முன்பு காட்டினார். அதை சிலர் புகைப்படம் எடுத்தனர். அந்த கடிதத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கேரள அரசியல்வாதிகள் சிலருடன் சேர்ந்து தன்னை பயன்படுத்திக் கொண்டதாக சரிதா எழுதியுள்ளார் என்று சில பிரபலமான மலையாள செய்தி தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக பிரபல மலையாள நடிகரும், அரசியல்வாதிகளும் சரிதாவை பலாத்காரம் செய்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மோகன்லாலின் பெயர் அடிபடுகிறது. இதனால் மோகன்லால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்பும் கூட சரிதா நாயர் பல பிரபலங்கள் மீது குற்றம் சாட்டினார். ஆனால் அவற்றை அவரால் நிரூபிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X