Don't Miss!
- Sports பக்கத்தில் வந்து தோற்றுவிட்டோம்! இதயம் முற்றிலும் நொறுங்கிவிட்டது..பஞ்சாப் கேப்டன் சாம் கரண் கருத்து
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நிகிதாவை ஆன்மீகத்துக்கு தாவ வைத்த கன்னட சினிமா பாலிடிக்ஸ்!
தமிழில் வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முரண் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார் நிகிதா.
கன்னட நடிகர் தர்ஷனுக்கும் நிகிதாவுக்கும் தகாத உறவு இருந்ததாகவும் இதனால் முதல் மனைவியை தர்ஷன் சித்ரவதை செய்து அடித்து விரட்டியதாகவும் செய்தி வெளியாயின.
இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து நிகிதா சினிமாவில் நடிக்க கன்னட தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்தது. தடையை நீக்கும்படி நடிகர்கள் உள்ளிட்ட பலர் வற்புறுத்தினர். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா தலையிட்ட பிறகே அத்தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சர்ச்சைகள் நிகிதாவை விரக்தியடையச் செய்து, ஆன்மீகத்தின் பக்கம் தள்ளிவிட்டன.
தனது ஆன்மீக ஈடுபாடு குறித்து நிகிதா கூறுகையில், "எனக்கு கன்னட தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடை விதித்தது நாடு முழுக்க எதிரொலித்தது. உழைக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் இது போன்ற பிரச்சினைகள் சந்தித்துதான் ஆக வேண்டும்.
இந்த சினிமா அரசியலே வேண்டாம் என்றுதான் நான் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுகிறேன். இதனால் மனம் தெளிவாகவும் பலமாகவும் ஆகிவிட்டது.
இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பக்குவப்பட்டுவிட்டேன். இனி முழு கவனமும் சினிமாவில்தான். சிறந்த நடிகை என்ற பெயர் எடுக் முழு மூச்சாக பாடுபடுவேன்," என்றார்.
முன்னர் அறிவித்த திருமணம் குறித்து கேட்டபோது, "என் தந்தை இறந்த சில மாதங்கள்தான் ஆகின்றன. எனவே திருமணம் குறித்து இப்போது யோசிக்கவில்லை," என்றார்.