Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நிகிதாவை ஆன்மீகத்துக்கு தாவ வைத்த கன்னட சினிமா பாலிடிக்ஸ்!
தமிழில் வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முரண் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார் நிகிதா.
கன்னட நடிகர் தர்ஷனுக்கும் நிகிதாவுக்கும் தகாத உறவு இருந்ததாகவும் இதனால் முதல் மனைவியை தர்ஷன் சித்ரவதை செய்து அடித்து விரட்டியதாகவும் செய்தி வெளியாயின.
இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து நிகிதா சினிமாவில் நடிக்க கன்னட தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்தது. தடையை நீக்கும்படி நடிகர்கள் உள்ளிட்ட பலர் வற்புறுத்தினர். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா தலையிட்ட பிறகே அத்தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சர்ச்சைகள் நிகிதாவை விரக்தியடையச் செய்து, ஆன்மீகத்தின் பக்கம் தள்ளிவிட்டன.
தனது ஆன்மீக ஈடுபாடு குறித்து நிகிதா கூறுகையில், "எனக்கு கன்னட தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடை விதித்தது நாடு முழுக்க எதிரொலித்தது. உழைக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் இது போன்ற பிரச்சினைகள் சந்தித்துதான் ஆக வேண்டும்.
இந்த சினிமா அரசியலே வேண்டாம் என்றுதான் நான் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுகிறேன். இதனால் மனம் தெளிவாகவும் பலமாகவும் ஆகிவிட்டது.
இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பக்குவப்பட்டுவிட்டேன். இனி முழு கவனமும் சினிமாவில்தான். சிறந்த நடிகை என்ற பெயர் எடுக் முழு மூச்சாக பாடுபடுவேன்," என்றார்.
முன்னர் அறிவித்த திருமணம் குறித்து கேட்டபோது, "என் தந்தை இறந்த சில மாதங்கள்தான் ஆகின்றன. எனவே திருமணம் குறித்து இப்போது யோசிக்கவில்லை," என்றார்.