Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கலக்கல் கேரக்டரில் மும்தாஜ்! சூப்பரான கேரக்டரில் நடித்து வருவதாக மும்தாஜ் சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.சில்க் ஸ்மிதாவிற்குப் பிறகு தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் மஞ்சம் போட்டு அமர்ந்து மயக்கியவர் மும்தாஜ்தான். குஷி படத்தில் அவர்போட்ட கட்டிப் பிடியை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படியே மயங்கிப் போனவர்கள், தொடர்ந்து மும்தாஜ் போட்ட பலகுத்தாடங்களை கண்டுகளித்து உருகிப் போனார்கள்.காலத்தின் கட்டாயமாக மும்தாஜுக்கும் இறங்குமுகம் ஏற்பட்டது. பட வாய்ப்புகள் குறைந்து போய் இப்போது ஃப்ரீயாக உள்ளார்.அவ்வப்போது சில பட வாய்ப்புகள் அவரிடம் வந்து போகின்றன. தனது இடம் இன்னும் காலியக்காதன் உள்ளது. அதை என்னால்மட்டுமே நிரப்ப முடியும். நிச்சயம் நானே வந்து அந்த கேப்பை அடைப்பேன் என்று கூறி வருகிறார் மும்தாஜ்.அவரது காத்திருப்பு வீண் போகவில்லை என்பது போல சில படங்களில் அட்டகாசமான ரோல்கள் அவருக்குக் கிடைத்துள்ளன.அதுபோன்ற ஒரு படம்தான் இதுதான் காதல் என்பதா?. தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரான வி.விஸ்வநாதன் இப்படத்தைதயாரிக்கிறார்.இதில் மொத்தம் 3 ஹீரோயின்கள் ஸ்ருதி, மீரா வாசுதேவன், அப்புறம் நம்ம மும்தாஜ். இதில் கல்லூரி மாடர்ன் கேர்ள் ஆக ஸ்ருதியும்,போலீஸ்காரியாக மீரா வாசுதேவனும், நடிகையாக மும்தாஜும் வருகிறார்கள்.இதில் மும்தாஜின் வேடம் படு வித்தியாசமானதாம். எப்படி என்றால் சதி லீலாவதியில் கோவை சரளா கலக்கியதைப் போல அட்டகாசமானகேரக்டராம். இதை விட பெரிய விஷயம், மும்தாஜ் இப்படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்து வருகிறாராம்.இந்தக் கேரக்டர் நிச்சயம் தமிழ் ரசிகர்களிடையே எனக்கு சூப்பர் பெயரை வாங்கித் தரும். நடிப்பிலும் என்னால் கலாய்க்க முடியும் என்பதைரசிகர்கள் உணர்வார்கள். அதேசமயம் கிளாமரிலும் வெளுத்து வாங்கியுள்ளேன். இந்தக் கேரக்டர் மூலம் எனது நடிப்பையும்,கிளாமரையும் ஒரு சேர பார்த்த ரசிக்கலாம் என்கிறார் மும்தாஜ் பூரிப்புடன்.சரி இனிமேல் குத்தாட்டம் ஆட மாட்டீஹளா என்று ஏக்கத்துடன் கேட்டபோது, அப்படியெல்லாம் கிடையாது. என்ன ரோல் வந்தாலும்அதை ஏற்று சிறப்பாக செய்வேன். குத்தாட்டம் என்று கூறாதீர்கள். அதுவும் கஷ்டமான ஆட்டம்தான். வேகமான முவ்மென்ட்களை செய்துமுடித்து விட்டு வீட்டுக்குப் போகும்போது கை, கால் எல்லாம் எப்படி வலிக்கும் என்பது எங்களுக்குத்தான் தெரியும் என்கிறார் ஆதங்கமாக.மும்ஸ் சொன்னா சரித்தான்!
சூப்பரான கேரக்டரில் நடித்து வருவதாக மும்தாஜ் சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.
சில்க் ஸ்மிதாவிற்குப் பிறகு தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் மஞ்சம் போட்டு அமர்ந்து மயக்கியவர் மும்தாஜ்தான். குஷி படத்தில் அவர்போட்ட கட்டிப் பிடியை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படியே மயங்கிப் போனவர்கள், தொடர்ந்து மும்தாஜ் போட்ட பலகுத்தாடங்களை கண்டுகளித்து உருகிப் போனார்கள்.
காலத்தின் கட்டாயமாக மும்தாஜுக்கும் இறங்குமுகம் ஏற்பட்டது. பட வாய்ப்புகள் குறைந்து போய் இப்போது ஃப்ரீயாக உள்ளார்.அவ்வப்போது சில பட வாய்ப்புகள் அவரிடம் வந்து போகின்றன. தனது இடம் இன்னும் காலியக்காதன் உள்ளது. அதை என்னால்மட்டுமே நிரப்ப முடியும். நிச்சயம் நானே வந்து அந்த கேப்பை அடைப்பேன் என்று கூறி வருகிறார் மும்தாஜ்.
அவரது காத்திருப்பு வீண் போகவில்லை என்பது போல சில படங்களில் அட்டகாசமான ரோல்கள் அவருக்குக் கிடைத்துள்ளன.அதுபோன்ற ஒரு படம்தான் இதுதான் காதல் என்பதா?. தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரான வி.விஸ்வநாதன் இப்படத்தைதயாரிக்கிறார்.
இதில் மொத்தம் 3 ஹீரோயின்கள் ஸ்ருதி, மீரா வாசுதேவன், அப்புறம் நம்ம மும்தாஜ். இதில் கல்லூரி மாடர்ன் கேர்ள் ஆக ஸ்ருதியும்,போலீஸ்காரியாக மீரா வாசுதேவனும், நடிகையாக மும்தாஜும் வருகிறார்கள்.
இதில் மும்தாஜின் வேடம் படு வித்தியாசமானதாம். எப்படி என்றால் சதி லீலாவதியில் கோவை சரளா கலக்கியதைப் போல அட்டகாசமானகேரக்டராம். இதை விட பெரிய விஷயம், மும்தாஜ் இப்படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்து வருகிறாராம்.
இந்தக் கேரக்டர் நிச்சயம் தமிழ் ரசிகர்களிடையே எனக்கு சூப்பர் பெயரை வாங்கித் தரும். நடிப்பிலும் என்னால் கலாய்க்க முடியும் என்பதைரசிகர்கள் உணர்வார்கள். அதேசமயம் கிளாமரிலும் வெளுத்து வாங்கியுள்ளேன். இந்தக் கேரக்டர் மூலம் எனது நடிப்பையும்,கிளாமரையும் ஒரு சேர பார்த்த ரசிக்கலாம் என்கிறார் மும்தாஜ் பூரிப்புடன்.
சரி இனிமேல் குத்தாட்டம் ஆட மாட்டீஹளா என்று ஏக்கத்துடன் கேட்டபோது, அப்படியெல்லாம் கிடையாது. என்ன ரோல் வந்தாலும்அதை ஏற்று சிறப்பாக செய்வேன். குத்தாட்டம் என்று கூறாதீர்கள். அதுவும் கஷ்டமான ஆட்டம்தான். வேகமான முவ்மென்ட்களை செய்துமுடித்து விட்டு வீட்டுக்குப் போகும்போது கை, கால் எல்லாம் எப்படி வலிக்கும் என்பது எங்களுக்குத்தான் தெரியும் என்கிறார் ஆதங்கமாக.
மும்ஸ் சொன்னா சரித்தான்!