Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சமந்தாவின் முடிவு என்ன? நாக சைதன்யா விளக்கம்
Recommended Video
ஹைதராபாத்: நடிகை சமந்தா சினிமாவை விட்டு விலக மாட்டார் என நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் உச்சத்தில் இருக்குபவர் நடிகை சமந்தா. தமிழ்ப்பெண்ணாக பிறந்து தெலுங்கு மருமகளாக சென்றாலும், தமிழ் ரசிகர்கள் விட்டுகொடுக்கவில்லை. சமந்தா தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று சொல்லும் அளவிற்கு அதிஷ்டம் திறமை இரண்டும் ஒருசேர பெற்றவர். இதனிடையே, 2019 ஆண்டு சினிமாவை விட்டு விலகப்போவதாக செய்திகள் பரவின.
பரவியவை செய்திகள் அல்ல, அவை வதந்திகள் என முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சமந்தாவின் கணவரும் நடிகருமான நாக சைதன்யா. சமந்தாவுக்கு இப்போது சினிமாவிலிருந்து விலகும் திட்டம் இல்லை. கைவசம் நிறைய படங்கள் உள்ளன. கொஞ்சம் இடைவெளி விட்டு நடிப்பார், ஆனால் சினிமாவை விட்டு விலக மாட்டார் என தெரிவித்துள்ளார்.
திருமணமான இளம் தம்பதியரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து தெலுங்கு இயக்குனர் சிவா நிர்வானா ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் சமந்தா-நாக சைதன்யா நடிக்கின்றனர். ரொமான்ஸ் காட்சிகளுக்கு இயக்குனரின் வழிகாட்டுதல் தேவைப்படாது என சிவா நிர்வானா தெரிவித்திருந்தார்.
சமந்தா, சிவகார்த்திகேயனுடன் நடித்த சீம ராஜா ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படும் கன்னட படமான யூ டர்னில் சமந்தா நடிக்கிறார். அந்தப்படத்தில் விக்ரம் வேதா கதாநாயகி ஸ்ரதா ஸ்ரீநாத்தின் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். இத்திரைப்படத்தை பவன் குமார் இயக்குகிறார்.
சமந்தாவிற்கு தமிழில் இரும்புத்திரை, தெலுங்கில் மகாநதி மற்றும் ரங்கஸ்தலம் என்று சமீபத்திய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நாகர்ஜுனாவை போலவே, மிகவும் வெளிப்படையானவர். விமர்சனத்திற்கு பயப்படாதவர் சமந்தா என நாக சைதன்யா புகழ்ந்துள்ளார்.