Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஒரே குகையில் சந்தித்த இரண்டு கவர்ச்சி சிங்கங்கள்!
கவர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் நமீதாவும், சோனாவும். இருவரும் சேம் போட்டில் பயணம் செய்தாலும் கூட சோனாவை விட நமீதாவுக்கே ரசிகர்கள் ஜாஸ்தி. யார் படத்திற்கு அதிக குஸ்தி நடக்கும் என்று பந்தயம் வைத்தால் அதில் வெல்பவர் நமீதாவாகத்தான் இருப்பார். அப்படி ஒரு கட்டுக்கடங்கா ரசிகர் கூட்டத்தை தன் பக்கம் வைத்திருப்பவர் நமீதா.
நமீதாவுக்கு இணையாக சோனாவும் ஷோக்காக இருந்தாலும் கூட நமீதாவின் கவர்ச்சி நிழலுக்கு பக்கத்தில் கூட வர முடியாமல் போய் ஜகா வாங்க நேரிட்டது.
இடையில் இருவருக்கும் மோதல் முற்றிக் கொண்டு, பகைமை பற்றிக் கொண்டது. நமீதாவைப் பார்த்து திமிர் பிடித்தவர் என சோனா உறும, சோனான்னா இன்னா என்று நமீதா பதிலுக்கு வார பகைமை முற்றியது.
ஆனால் சமீபத்தில் சோனா தனது பிறந்த நாளையொட்டி கொடுத்த பாட்டில் பிளஸ் ஆட்டம் பாட்ட பார்ட்டியில் நமீதா விசிட் அடித்து அனைவரையும் விசிலடிக்க வைத்தார்.
திரையுலகின் இளவட்ட நடிகர் நடிகையர் உள்பட பலரும் திரண்டு வந்து சோனாவை வாழ்த்தியெடுத்து விட்டனர். இந்த விழாவில்தான் நமீதாவும் நாலு வார்த்தை பாராட்டி வெழாவை சிறப்பித்து விட்டுப் போனார்.
மொத்தத்தில் இதுவரை எதிரும் புதிருமாக முறுக்கிக் கொண்டிருந்த இந்த இரண்டு கவர்ச்சி சிங்கங்களும் ஒரே குகையில் சந்தித்து தங்களது பகையைத் தணித்துக் கொண்டு விட்டன.
சரி, ரெண்டு பேரும் சேர்ந்து தங்களது முழுத் திறமையைக் காட்டி ஒரு படத்தில் நடிப்பார்களா என்று கும்பக்கரையிலிருந்து ஒரு ரசிகர் ஏக்கத்துடன் கேட்கிறார்..