Don't Miss!
- News மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தூது விடும் நமீதா நமீதா மெதுவாக தமிழில் இருந்து நகர்ந்து செல்ல ஆரம்பித்துள்ளார். காரணம், கைவசம் படங்கள் இல்லாததுதான்.கடந்த 2 வருடமாக கோலிவுட்டை ஆட்டிப் படைத்த நமீதாவின் கைவசம் ஒரு தமிழ்ப் படமும் இல்லை. இதற்குக்காரணம் காதலர் ஸ்டீவன் கபூர் தான் என்கிறார்கள்.படத் தயாரிப்பு பார்ட்டிகளும் இயக்குனர்களும் நமீதாவை கொஞ்சம் தனிமையில் வைத்து கடலை போட கூடஇவர் விடுவதில்லையாம். இதைத் தவிர படப்பிடிப்புத் தளத்தில் வந்து அமர்ந்து கொண்டு மும்பை பந்தாவைகாட்டுவதால் எரிச்சலாகிப் போன தயாரிப்பாளர்கள், கபூரை விட்டுவிட்டு வராதவரை நமீதாவை புக்செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.இதனால் நமீதா வசம் படங்களின் எண்ணிக்கை அபூர்வமாகிவிட்டது. முன்பு தெலுங்கிலும் கபூர் செய்தஅலப்பறையால் தான் நமீதாவை அந்த ஊர் தயாரிப்பாளர்கள் நமிதாவை கண்டு கொள்ளாமல் விட்டனர்.இதனால் தான் அவர் தமிழுக்கே வந்தார்.இந் நிலையில் நமீதாவின் தமிழ் சினிமா வாழ்விலும் விளையாடிவிட்டார் கபூர். இதனால் இந்தி, கன்னடம் எனகிடைத்த வாய்ப்புகளை இழுத்துப் போட்டுக் கொண்டு போக ஆரம்பித்துவிட்டார் நமீதா.ஏற்கனவே ரிஷிகபூர் ஹீரோவாக நடித்த பியார் கா சக்கர்மே என்ற அந்தக் கால படத்தில் புதுமுக நடிகர்ஒருவருக்கு ஜோடியாக நடித்த நமீதாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது சன்னி தியோலுடன் ஜோடிசேர வாய்ப்பு வந்துள்ளது.இதைத் தவிர மாயா என்ற ஒரு காமசூத்ரா மாதிரியான ஒரு இந்தி-ஆங்கில கலவை படத்திலும் நமிதா நடிக்கிறார்.சும்மாவே கலக்கும் நமீதாவுக்கு காமா கதை என்றால் விட்டுவிடுவாரா.. தனது பிரமாண்டத்தை அப்படியே 70எம்எம்மில் இறக்கி வைத்து வருகிறாராம்.இதற்கிடையே கன்னடத்திலும் ரவிச்சந்திரனுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நமீதா. தமிழில்இருந்து கன்னடத்தில் தயாரகும் அரண்மனைக்கிளி படத்தில் தமிழில் அஹானா நடித்த வேடத்தில் நமீதா நடிக்கஉள்ளார்.தமிழ்நாட்டில் சம்பாதித்த காசில் குஜராத்தில் தனது தந்தைக்காக ஒரு டெக்ஸ்டைல் பேக்டரியை வைத்துத்தந்துள்ளார் நமீதா. இதுவரை துணி வியாபாரம் செய்து வந்த குடும்பம் இனி துணி தயாரிப்பிலும் இறங்குகிறது.(அப்படியே நமீதாவுக்கும் 2 மீட்டர் டிரஸ் குடுத்தா நல்லது)இப்போதைக்கு வாய்ப்பில்லாமல் தமிழை விட்டுவிட்டுப் போனாலும் தமிழை நமீதா விடப் போவதில்லையாம்.தமிழ் தவிர தெலுங்குப் படங்களிலும் மீண்டும் ஆசையாக இருக்கிறாராம் நமீதா.இதற்காக வாய்ப்பு கேட்டு தமிழ், தெலுங்கில் பல தரப்புக்கும் தூது விட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், இதுவரையாரும் இறங்கி வரவில்லை. ஒருவேளை கபூரை ஒதுக்கி வைத்துவிட்டு நமீதா மட்டும் வந்தால் நம்மவர்கள் கைகொடுப்பார்களோ என்னவோ.
நமீதா மெதுவாக தமிழில் இருந்து நகர்ந்து செல்ல ஆரம்பித்துள்ளார். காரணம், கைவசம் படங்கள் இல்லாததுதான்.
கடந்த 2 வருடமாக கோலிவுட்டை ஆட்டிப் படைத்த நமீதாவின் கைவசம் ஒரு தமிழ்ப் படமும் இல்லை. இதற்குக்காரணம் காதலர் ஸ்டீவன் கபூர் தான் என்கிறார்கள்.
படத் தயாரிப்பு பார்ட்டிகளும் இயக்குனர்களும் நமீதாவை கொஞ்சம் தனிமையில் வைத்து கடலை போட கூடஇவர் விடுவதில்லையாம். இதைத் தவிர படப்பிடிப்புத் தளத்தில் வந்து அமர்ந்து கொண்டு மும்பை பந்தாவைகாட்டுவதால் எரிச்சலாகிப் போன தயாரிப்பாளர்கள், கபூரை விட்டுவிட்டு வராதவரை நமீதாவை புக்செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
இதனால் நமீதா வசம் படங்களின் எண்ணிக்கை அபூர்வமாகிவிட்டது. முன்பு தெலுங்கிலும் கபூர் செய்தஅலப்பறையால் தான் நமீதாவை அந்த ஊர் தயாரிப்பாளர்கள் நமிதாவை கண்டு கொள்ளாமல் விட்டனர்.இதனால் தான் அவர் தமிழுக்கே வந்தார்.
இந் நிலையில் நமீதாவின் தமிழ் சினிமா வாழ்விலும் விளையாடிவிட்டார் கபூர். இதனால் இந்தி, கன்னடம் எனகிடைத்த வாய்ப்புகளை இழுத்துப் போட்டுக் கொண்டு போக ஆரம்பித்துவிட்டார் நமீதா.
ஏற்கனவே ரிஷிகபூர் ஹீரோவாக நடித்த பியார் கா சக்கர்மே என்ற அந்தக் கால படத்தில் புதுமுக நடிகர்ஒருவருக்கு ஜோடியாக நடித்த நமீதாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது சன்னி தியோலுடன் ஜோடிசேர வாய்ப்பு வந்துள்ளது.
இதைத் தவிர மாயா என்ற ஒரு காமசூத்ரா மாதிரியான ஒரு இந்தி-ஆங்கில கலவை படத்திலும் நமிதா நடிக்கிறார்.சும்மாவே கலக்கும் நமீதாவுக்கு காமா கதை என்றால் விட்டுவிடுவாரா.. தனது பிரமாண்டத்தை அப்படியே 70எம்எம்மில் இறக்கி வைத்து வருகிறாராம்.
இதற்கிடையே கன்னடத்திலும் ரவிச்சந்திரனுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நமீதா. தமிழில்இருந்து கன்னடத்தில் தயாரகும் அரண்மனைக்கிளி படத்தில் தமிழில் அஹானா நடித்த வேடத்தில் நமீதா நடிக்கஉள்ளார்.
தமிழ்நாட்டில் சம்பாதித்த காசில் குஜராத்தில் தனது தந்தைக்காக ஒரு டெக்ஸ்டைல் பேக்டரியை வைத்துத்தந்துள்ளார் நமீதா. இதுவரை துணி வியாபாரம் செய்து வந்த குடும்பம் இனி துணி தயாரிப்பிலும் இறங்குகிறது.(அப்படியே நமீதாவுக்கும் 2 மீட்டர் டிரஸ் குடுத்தா நல்லது)
இப்போதைக்கு வாய்ப்பில்லாமல் தமிழை விட்டுவிட்டுப் போனாலும் தமிழை நமீதா விடப் போவதில்லையாம்.தமிழ் தவிர தெலுங்குப் படங்களிலும் மீண்டும் ஆசையாக இருக்கிறாராம் நமீதா.
இதற்காக வாய்ப்பு கேட்டு தமிழ், தெலுங்கில் பல தரப்புக்கும் தூது விட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், இதுவரையாரும் இறங்கி வரவில்லை. ஒருவேளை கபூரை ஒதுக்கி வைத்துவிட்டு நமீதா மட்டும் வந்தால் நம்மவர்கள் கைகொடுப்பார்களோ என்னவோ.