மனஅழுத்தம், பென்னே மசாலா தோசை: ஐஐஎம் மாணவர்களை கவர்ந்த தீபிகா படுகோனே
பெங்களூர்: ஐஐஎம் பெங்களூர் மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் பற்றி பேசினார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே.
பெங்களூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் நடந்த வியாபாரம் மற்றும் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டார்.
சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தீபிகா மாணவ, மாணவியரிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

தாத்தா வீடு
பெங்களூர் மல்லேஸ்வரத்தில் என் தாத்தா வீட்டிற்கு சென்ற நினைவு வருகிறது. சிடிஆரில் தான் சுவையான பென்னே மசாலா தோசை கிடைக்கும். அதை சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

மனஅழுத்தம்
நான் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். ஆனால் உரிய உதவி பெற்று மனஅழுத்தத்தில் இருந்து விடுபெற்றேன். தற்போது நான் நலமாக உள்ளேன். இதை ஏன் கூறுகிறேன் என்றால் மனஅழுத்தத்திற்கு விடிவு உண்டு.

அரசியல்
மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்ச வேண்டாம். அதில் இருந்து வெளியே வர முடியும். நான் அரசியல் விவகாரங்கள் பற்றி பேசுவது இல்லை. எதை பற்றி பேசினால் உதவியாக இருக்குமோ அதை பற்றி மட்டுமே பேசுகிறேன்.

அனுபவம்
என் வாழ்வில் நிறைய பார்த்துள்ளேன். என் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இருட்டின் முடிவில் வெளிச்சம் உள்ளது என்பதை பாருங்கள். மனஅழுத்தம் ஏற்பட்டால் தக்க உதவி பெற்று குணமடையுங்கள்.


Click it and Unblock the Notifications











