நந்தனாவிடம் கலாட்டா செய்த மீனவர்கள்! சென்னை அருகே நடந்த கலிங்கா படப்பிடிப்பின்போது மீனவர்கள் சிலர் கதாநாயகி நந்தனா உள்ளிட்ட சிலரிடம் கலாட்டாசெய்ததால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பாலா, நந்தனா ஜோடியாக நடிக்கும் கலிங்கா படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே ஆந்திர மாநில எல்லை அருகே உள்ளமீனவர் கிராமத்தில் நடந்தது. இதில் நந்தனா, பாலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் குடிபோதையில் படப்பிடிப்புக் குழுவினரிடம் தகராறு செய்தனர்.அவர்களில் சிலர், நந்தனாவிடம் கலாட்டா செய்ய முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கதாநாயகன் பாலா மீனவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தார். இருப்பினும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அங்கிருந்து அனைவரும் கிளம்பினர். பின்னர் திருவொற்றியூர் பகுதியில் உள்ள மீனவர் குடியிருப்பில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
சென்னை அருகே நடந்த கலிங்கா படப்பிடிப்பின்போது மீனவர்கள் சிலர் கதாநாயகி நந்தனா உள்ளிட்ட சிலரிடம் கலாட்டாசெய்ததால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
பாலா, நந்தனா ஜோடியாக நடிக்கும் கலிங்கா படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே ஆந்திர மாநில எல்லை அருகே உள்ளமீனவர் கிராமத்தில் நடந்தது. இதில் நந்தனா, பாலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் குடிபோதையில் படப்பிடிப்புக் குழுவினரிடம் தகராறு செய்தனர்.அவர்களில் சிலர், நந்தனாவிடம் கலாட்டா செய்ய முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கதாநாயகன் பாலா மீனவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தார். இருப்பினும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அங்கிருந்து அனைவரும் கிளம்பினர்.
பின்னர் திருவொற்றியூர் பகுதியில் உள்ள மீனவர் குடியிருப்பில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications