Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இரண்டாவது முறையாக நந்தி விருது பெறுகிறார் அனுஷ்கா!
ஐதராபாத் : தெலுங்கு மொழித் திரைப்படம், தொலைக்காட்சி, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்த கலைஞர்களுக்கு நந்தி விருது அளிக்கப்படுகிறது. தற்போது 2014, 2015, 2016-ம் ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
2015-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் விருதைத் தட்டிச் சென்றுள்ளது 'பாகுபலி' திரைப்படம். இயக்குனர் ராஜமௌலி 2014-ம் ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான பி.என்.ரெட்டி மாநில விருதைப் பெறுகிறார்.
2015-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான நந்தி விருதை அனுஷ்கா ஷெட்டி பெறுகிறார். 'சைஸ் ஸீரோ' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அனுஷ்காவுக்கு விருது வழங்கப்படுகிறது.
அனுஷ்கா நந்தி விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே 'அருந்ததி' படத்தில் நடித்ததற்காக 2009-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஸ்பெஷல் ஜூரி விருது பெற்றிருக்கிறார் அனுஷ்கா.
இரண்டாவது முறையாக நந்தி விருது பெறும் அனுஷ்காவை திரையுலகினரும், அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனுஷ்காவுக்கு இந்த விருது அறிவிப்பு செம ட்ரீட்.