'உதயநிதியை முழுசாக மாற்றிக் காட்டுகிறேன்!' - நயன் சபதம்... கிலியில் கிருத்திகா!

பிரபுதேவாவுடன் உறவு முறிந்த பிறகு மீண்டும் முழுவீச்சில் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகை நயன்தாரா.
இப்போது தமிழில் அஜீத், ஆர்யாவுடன் நடித்துவரும் நயன்தாரா, அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இது கதிர்வேலன் காதலியில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இருவரும் பங்கேற்ற போட்டோ ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் நெருக்கமாக நடிக்க கூச்சப்பட்டாராம் உதயநிதி. முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுக்க ரொம்ப தயங்கினாராம்.
இதைப் பார்த்த நயன்தாரா, உதயநிதியின் கூச்சத்தைப் போக்கும் வகையில் அவரிடம் பேசி, சகஜ நிலைக்குக் கொண்டு வந்தாராம்.
ஒருவழியாக போட்டோ ஷூட் முடித்ததும், அங்கு வந்திருந்த உதயநிதியின் மனைவி கிருத்திகாவிடம், சினிமாவில் நடிக்க கூச்சம்தான் முதல் எதிரி. அதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் பார்த்துக்கிட்டே இருங்க.. இந்தப் படம் முடிவதற்குள் உதயநிதியை முழுசாக மாற்றிக் காட்டுகிறேன்," என்றாராம்!
எப்படியோ.. இன்னொரு பிரபுதேவாவாக மாற்றிவிடாமல் இருந்தால் சரி!!


Click it and Unblock the Notifications











